15
20
25
30
35
எழிலியின் வரலாறறிந்த காதை
எதிர்ப்பெலாங் கடந்தாள்
மெல்லிசைத் தமிழின் மேன்மை விரும்பாச் செல்வர் சிலரும் செய்தி இதழரும் மொழிவெறி கொண்டாள் எனப்பழி மொழிவது தொழிலாக் கொண்டனர் கொல்லைகள் தங்தனர்; புன்கண் ஒன்றும் பொருளெனக் கருதிலள், தன்கண் வருவாய் கழைவது வேண்டிலள் ; அத&ன விழைவோர் தாமே அஞ்சுவர்? எதையும் அஞ்சிலள் எடுத்தகற் பணியில் ஆக்கமும் கேடும் அணுகுதல் உண்டென் றுக்கமும் உரனும் மீப்பட லாயினள், அயலி லிருந்தே அழிவினை வித்தும் பயனில பேசும் பதர்சிலர் ஒழிய மயல்ஒழிக் காரெலாம் மதித்தனர் போற்றினர்; தளிர்க்கும் அவள் புகழ் ககைப்பார் இல்லை : முளைப்பவர் எவரும் முகங்கவிழ்த் தேகினர் ;
இவ்வணம் இசையால் ஏற்றம் பெற்றனள் ;
காதல் மணம்
அவ்வுழை ஒருவன் அழகிய கூத்தன் ஆடல் வல்லான் அதனதன் துணுக்கம் நாடிய புலத்கான் நாடெலாம் வியந்து
திகரிலே இவற்கென நிகழ்த்துநற் பெயரோன் புகழில் மிதப்போன், பூவை எழிலியை மலர்மண மாலை சூட்ட விழைந்தனன் , கலைஞர் இருவர் கருத்தும் ஒன்றின. , கூத்தும் பாட்டும் குலவி மகிழ்ந்தன, ஏத்தும் புகழோ எழுந்தது திசைஎலாம் ;
99