இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
160
165
170
175
180
சிறைப்படு காதை
காவலர் நயவுரை
- யாது நிகழ்ந்த திங்ஙனம் அாற்றினை? தீதுதிர் செயலி தேன்மொழி பூங்கொடி யாதும் பழியுருள் ; வேதனை விட்டொழி , ஆழ்கடல் உலகில் அவள்கிகர் பெண்மகள் சூழினும் காண்கிலம் , தாயவள் கனக்குப் பாழ்மகன் இறந்தும் பழியினைத் தந்தனன் என்றன. யன்றாே? இறந்தும் தங்தனன் என்றதன் உட்பொருள் இயம்புதி கொல்லோ? இறந்தோன் உயிருடன் இருந்த காலே அறந்தேர் தெரிவைக் காற்றிய பழியினைத்
திறந்துளம் உரை'எனத் தெரித்தனர் காவலர் : AD தி தா த,
இருந்தும் பழி இறந்தும் பழி
‘இசைதெரி வேட்கையன், இவனவள் பாற்கொளும் நசைபெரி துடையன், நாளுமங் கினேவால் உருகி உருகி மருகுவன், அவளே மருவுதல் ஒன்றே வாழ்வின் குறியன், ஒருவுதல் நேரின் உயிரும் வேண்டிலன், இரவலன் போல இடையிடை அவள் பாற் குறுகுவன் கன்னுளக் குறிப்பினே விளம்புவன் இல்லறம் அறவே வேண்டிலா இம்மகள் புல்லும் இவனேப் பொருட்படுக் கிலளே, ஆயினும் உண்மை அறியார் சிலர்சிலர் தாயினை அலருாை சாற்றுதல் அறிவேன், இருந்தும் பழிமொழி இயற்றினன் பாவி இறந்தும் அம்மொழி ஏற்றினன் பாவி’ என்றுரை கூறி மாணவன் இருந்துழிக்
173