பக்கம்:பூங்கொடி.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

245

250

255

கிழார்திறம் அறிந்த காதை

உரிமை மகளே! உள்ளங் கழைக்க வருமென் மகளே வாவென் மகளே! இருகை நீட்டி இவ்வணம் மொழிந்தனர் ;

பூங்கொடி தொழுது மொழிதல்

பொழிகண் ணிரினள் பூங்கொடி மகிழ்ந்து கொழுகடி வீழ்ந்து விழுமிய அன்பால் எனேமக ளெனநீர் ஏற்றனிர் ஐய! முனம்ாம துறவினைக் கனவிலும் அறியோம் ; இயல்பினில் அம்முறை யிருந்திடப் பெற்றாேம்; மயல்,கரும் துன்பம் மடிந்தது நம்மிடை : சங்கை யின்றித் தவிக்குமென் குறையும் துந்தம் மகளிலா வெந்துயர்க் கொடுமையும் இன்றாே டொழிந்தன என்னுயிர்த் தந்தாப்

கிலக்கிழார் வாழ்த்துதல்

என்றாள் கைம்மலர் இறுகப் பற்றிக் தம்மிரு விழியொடு சார்த்திச் சார்த்தி

இம்மையின் பயனே இன்றே நுகர்ங்கேன் நம்மையொன் ருக்கிய நற்றமி Nசையை வாழ்க வாழ்கென வாழ்த்துவம் வாரீர்! வாழ்க மகளே! வாழிய தமிழ் என வாழ்த்திய கிலக்கிழார் வண்டமிழ்த் தொண்டராம் மலையுறை யடிகள் மலர்முகம் நோக்கித் தலைதனைத் தாழ்த்தித் தகவுடன் வணங்கினர்;

அடிகளார் வாயுறை வாழ்த்து

பெரியீர் வாழ்க! பேதைதும் மகளென

260 உரியீர் வாழ்க உறவும் ஓங்குக

195

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/214&oldid=665699" இலிருந்து மீள்விக்கப்பட்டது