பக்கம்:பூசைப் பாமாலை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 தாழ்சடையும் நீள்முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நானும் தோன்றுமால் ! -சூழும் திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுஉருவும் ஒன்ருய் இசைந்து. - பேயாழ்வார். 26 சங்குஎந்தும் மலர்க்குடங்கைப் புத்தேளும் மறைக்கோவும் தழல்கால் சூலம் அங்குஏந்தும் அம்மானும் தத்தமது தொழில்தலே நின்று ஆற்றச் செய்துஓர் பங்குஎந்தும் பெருமாட்டி விழிகளிப்ப இருமுனிவர் பணிந்து போற்றக் கொங்குஎந்தும் மணிமன்றுள் குனித்தருளும் பெருவாழ்வைக் குறித்து வாழ்வாம். - சிவஞானயோகிகள். 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/110&oldid=836319" இலிருந்து மீள்விக்கப்பட்டது