பக்கம்:பூசைப் பாமாலை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 யானே தவம் செய்தேன் ; ஏழ்பிறப்பும் எப்பொழுதும் யானே தவம்உடையேன் ; எம்பெருமான் !-யானே இருந்தமிழ்நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது. -பூதத்தாழ்வார். 28 என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த அன்பின் வழிவந்த ஆர்.அமு தே! அடி யேன் உரைத்த வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்.வளர் தில்லைதன்னுள் மின் புன் மிளிர்சடை வீசிநின்று ஆடிய விண்ணவனே! - கம்பியாண்டார் நம்பி 104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/111&oldid=836320" இலிருந்து மீள்விக்கப்பட்டது