பக்கம்:பூசைப் பாமாலை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே ! சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏர் ஆர்கோலம் திகழக் கிடந்தாய் ! கண்டேன் எம்மானே ! - கம்மாழ்வார் 4 காக்கக் கடவியநீ, காவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா!-பூக்கும் கடம்பா ! முருகா ! கதிர்வேலா! நல்ல இடங்காண் இரங்காய் இனி, - நக்கீரர் 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/99&oldid=836457" இலிருந்து மீள்விக்கப்பட்டது