பக்கம்:பூநாகம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 17

கலாட்டா செய்தீங்கன்னா இ பி கோ. 427-வது செக்ஷன்படி அத்துமீறி பிரவேசித்ததற்காகவும், செக்ஷன் 147-படி சட்ட விரோதமாய் கூடியதுக்காகவும், செக்ஷன் 327-படி சட்ட விரோத செயலுக்காகவும் செக்ஷன் : 41-படி வன்முறையில் ஈடுபட்ட துக்காகவும், நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக் கும். போலீஸ் ரிமாண்டும் ஏழாண்டு ஜெயிலும் கிடைக்கும். காரணம்... ஒரு பொருள் அல்லது உடைமை யார் கிட்ட இருக்குதோ அதுக்கும் அவங்களுக்கு ம் பாது காப்பு கொடுக்க வேண்டியது போலீஸ் டுட்டி. ஓ.கே. எனக்கு தலைக்கு மேல வேல... போங்க... போங்க...”

அந்த மூவரும் தள்ளாடித் தள்ளாடி இன் ஸ்பெக்டரின் அமானுஷ்யமான ஒரு சக்தி தள்ளிவிட்டது போல ஆட்டோ வுக்கு வந்தார்கள். முத்துவேல் சுருதி குறைந்து பேசி னார்,

'ஒனக்கு எவ்வளவு பண முன்னாலும் தர்றோம். தாசில் தார் ஆபீஸ் விடுப்பா?.

‘போறேன். ஸார். அதோ எனக்குத் தெரிஞ்ச வக்கீல் வர்றார். ஸார்... ஸார்...”

நீதிமன்றத்தில் போட்டுக் கொள்வதற்கும் காவல் நிலை யத்தில் கையில் வைத்துக் கொள்வதற்கும் பயன்படும் கறுப் புக்கோட்டோடு வந்த சிவப்பு மனிதர், அவர்களை வரவேண் டாம் என்று சொல்லிவிட்டு, அவரே வந்தார். முத்து வேல் விபரமாக எடுத்து ரைத்துப் பேசினார் அவர் பேச முடியாமல் தத்தளித்தபோது அழகம்மாவும் கலைச்செல்வியும் அவருக்கு உதவிக்கு வந்தார்கள். வக்கீல் எந்தவிதச் சலனமும் இல்லா மல் ஏற்கனவே செத்துப் போய், இப்போது அவர் ஆவி மட்டுமே பேசுவது போல பேசினார்.

தோசில்தார் ஆபீஸ்ல...அவரையும் அவரோட ரெவின்யூ இன் ஸ்பெக்டரையும் தேடுறதுக்கு ஒரு மாசமும்... அவர்கள் முகம் கொடுத்துப் பேச ஒரு வருவடிமும் ஆகும். இது அசல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/126&oldid=600584" இலிருந்து மீள்விக்கப்பட்டது