பக்கம்:பூநாகம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கூடு விட்டுக் கூடு.

ஒரு சுமார் கும்பிடும், அடிஷனலைப் பார்த்து சின்ன கும்பிடும் போட்டார். கும்பிடுகளிலேயே டிகிரி கணக்கைப் பார்ப் பவர்.

மாண்புமிகு அமைச்சர், முட்டை மேஜையின் முன்பக்கம் கிடந்த மூன்று ராஜா நாற்காலிகளில் நடு நாற்காலியில் உட்கார்ந்தார். முழு செகரட்டரியும், அடிஷனல் செகரட்டரி யும் இரு பக்கமும் உட்கார்ந்தபோது, ஒவ்வொரு செய்தியாளர் முன்பும் முந்திரிக்கொட்டைகளையும், லட்டையும், மெது பக்கோடாவையும் சுமக்கும் தட்டுக்கள் தோன்றின. பெரும் பாலானோர் அமைச்சரைப் பார்க்காமலே அவற்றை அசை போட்டபோது, கதிர்மணி ஒருவிதமான இடிப்புக் குரலில் கேட்டான்.

'மணி இப்போ பதினொன்னு இருபது.??

மாண்புமிகு அமைச்சர் கழுத்தில் போட்டிருந்த மஸ்ட்டர் கலர் துண்டை தலைக்கு மேல் கொண்டு போய் எட்டு வீடு கட்டும்? சிலம்பு போல் ஆட்டிக் கொண்டே, இருபுறமும் இருந்த உயர் அதிகாரிகளைப் பார்த்துவிட்டு, பின்பு கதிர் மணியை நோக்கி புன்னகையோடு பதிலளித்தார்.

'எஸ். நீங்க சொன்னது போல மணி பதினொன் னு, இருபதுதான். யு ஆர் கரெக்ட்.’’

செய்தியாளர்கள் சிரித்தார்கள். மாண்புமிகு அமைச்சரும் தன்னையறியாமலே அவர்களோடு சேர்ந்து சிரித்தார். பிறகு, பி.ஆர்.ஓ., அவர் அருகே போய், காதைக் கடித்த பிறகு தான், அவருக்கு தான் சிரித்திருக்கக் கூடாது என்று தோன் றியது. என்னடா நினைச்சே’, என்று கோபாமாக வந்த வார்த்தையை சாரி லேடடாயிட்டு. உள்ளபடியே வருந்து கிறோம்”, என்று மேக்கப் போட்டு வெளிப்படுத்தினார். இதற்குள், அமைச்சரின் அறிக்கை நகல்களை பி.ஆர்.ஓ.,. செய்தியாளர்களிடம் விநியோகித்தார். அதைப் படிக்காமலே, ஒரு நிருபர் கருத்து சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/21&oldid=600477" இலிருந்து மீள்விக்கப்பட்டது