பக்கம்:பூநாகம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 13

மோண்புமிகு அமைச்சர் பதவியேற்ற குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய சாதனைகளை புரிந்திருக்கிறார். நிருபர்கள் சார்பில் என் வாழ்த்துக்கள்!’’

கதிர்மணி பல்லை கடித்தபோது இன்னொரு விளம்பரப் பிரியன் (அதாவது தனது பத்திரிகைக்கு) ஒடிபோய் அவரது கையை குலுக்கினான். 'தினக்கன் மோகனன் ஒரு கேள்வி கேட்டான்.

‘அமைச்சரான பிறகு ஒருத்தருக்கு அடி வயிறு பெருக் கும். கன்ன்ங்கள் கண்களை மறைக்கும். ஆனால், நீங்க என்னடான்னா துரும்பா இளைச்சிட்டீங்களே. இதுக்கு என்ன காரணம்???

மாண்புமிகு அமைச்சர் பெருத்திருந்த தனது அடி வயிற்றை முட்டை மேஜைக்குள் மறைத்துக் கொண்டு, சுகப் பிரசவமாய் சிரித்துக் கொண்டு பதிலளித்தார்.

'என்ன பண்றது. இரவெல்லாம் மக்களுக்கு எப்படி சேவை செய்யனும் என்கிற சிந்தனை. பகலெல்லாம் அந்த சிந்தனையை செயல்படுத்த டிஸ்கவடின், செமினார், சிம்போசியம், கருத்தரங்கு, உரை கோவை... அப்பப்பா எவ்வளவு வேலை.’’

  • அப்போ ஆக்ஷன் இனிமேல்தான்.”

மாண்புமிகு அமைச்சர், சாதாரணமாய் சொல்வது போல் குத்தலாய் கேட்ட கேட்ட கதிர்மணியை, நோக்கி கோபச் சிரிப்பை உதிர்த்தபோது, ஒரு நிருபர் ஏற்கனவே சொல்லிக் கொடுத்தது போன்ற ஒரு பிளாண்டட் கேள்வியை கேட்டார்.

'உங்களுக்கு முன்னால் பதவி வகித்த மாற்றுக் கட்சி அமைச்சர் காளமேகம் மீது ஊழல் விசாரணை நடைபெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/22&oldid=600478" இலிருந்து மீள்விக்கப்பட்டது