பக்கம்:பூநாகம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் #5

பெயரில் இரண்டு நட்சத்திர ஓட்டல் எப்படி வந்தது? தியாக ராய நகரில் ஒரு அடுக்கு மாடி வீடு எப்படி கிடைத்தது? ஏழெட்டு அம்பாசிடர்கள் எப்படி வந்தன? இப்போ கூட சென்னையில் கேந்திரமான ஒரு இடத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு ஏர்கண்டிஷன் சினிமா தியேட்டர் அவரோட பினாமி சொத்து. இன்னும் ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை கிடைக்கும். அப்போது காளமேகத்தின் தகிடுதத்தங்கள் அரங்கேற்றமாகும். சரி, லஞ்சுக்கு நேரமாயிட்டுது. இந் தாப்பா பி.ஆர். ஒ., லஞ்சுக்கு எங்க ஏற்பாடு? சோழாவா இல்ல. சவேராவா ?’’

  • எல்லாரும் எழுந்திருக்கப் போனார்கள். கதிர்மணி தான் அவர்களை கையமர்த்திவிட்டு, ஒன் மினிட் சார்,’’ என்றான். எழுந்த அமைச்சர் இருக்க மனமில்லாமல் நின்ற படியே அவனை பார்த்தார்.

கதிர்மணி ஒரு வேட்டு போட்டான். போன வாரம் உங்க வீட்டில் இன்கம் டாக்ஸ் ரெய்டு நடந்து கணக்கில் வராத பங்கு பத்திரங்களும், ஐம்பது லட்ச ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாய் அதே காளமேகம் அறிக்கை விட்டிருக் கார். இதுபற்றி உங்க கருத்து என்ன சார்...???

'சந்திரனை பார்த்து நாய் குலைக்கிறது மாதிரி இது.”

'அப்படிச் சொல்றது சரிப்படாது சார் . ஏன்னா, நீங்க சாட்டுற குற்றச்சாட்டுககு காளமேகமும் இதே பாணியில் பதில் அளிக்கலாம் பாருங்க...’’

'ஏதேது . நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போலி ருக்கே . ஒங்க பேரு என்னங்க...??

'கதிர்மணி, தினத் தகவலின் மூத்த செய்தியாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/24&oldid=600480" இலிருந்து மீள்விக்கப்பட்டது