பக்கம்:பூநாகம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கூடு விட்டுக் கூடு...

'இந்தா பாருங்க கதிர். அந்த காளமேகம் வசமா சிக்கிக்கிட்டார். தன்னோட ஊழலை மறைக்க இப்படியொரு பழியை போடுகிறார்.’’

'அவர் போட்டது பழியோ அல்லது உங்களுக்கு வெட் டின குழியோ எங்களுக்கு தெரிய வேண்டியது உங்க வீட்டுல இன் கம்டாக்ஸ் சோதனை நடந்ததா... நடக் கலையா...???

மாண்புமிகு அமைச்சர், மெத்தை நாற்காலியில் விழுந்து அதற்கு வலியை ஏற்படுத்தினார். கதிர்மணியை கண்டிப் பாக பார்த்தபடியே பதிலளித்தார்.

'எனக்குத் தெரிந்து நடக்கலை.”

'அதாவது உங்க வீட்ல ஐ.டி., ரெய்ட் நடக்கலைன்னு சொல்றீங்க...??

'அப்படியே வெச்சுக்குங்க... புறப்படலாமா?’’

இன்னும் ஒரே நிமிஷம் சார். மாற்றுக்கட்சி காள மேகம் உங்க விட்டுல ரெய்ட் நடந்ததா மட்டும் அறிக்கை விடல... பால் விற்றுக் கொண்டிருந்த உங்களுக்கு இவ்வளவு குறுகிய காலத்திலேயே ஐம்பது லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் எப்படி கிடைத்ததுன்னு மட்டும் கேட்கலஇந்தக் குற்றச்சாட்டை அவதூறாக கருதி தன் மீது வழக்கு போடும் துணிச்சல் உங்களுக்கு இருக்குதா என்று சீண்டி யிருக்கிறார். அதனால அவர் மேல நீங்க அவதூறு வழக்கு போடலாமே...??

'யோசிக்க வேண்டிய விஷயம்.’’

'இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்குன்னே எக்ன குத் தெரியல...??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/25&oldid=600481" இலிருந்து மீள்விக்கப்பட்டது