பக்கம்:பூநாகம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு , சமுத்திரம் 49

முன்புறமாக வந்தார். எதையோ பெருக்கிக் கொண்டு இருந்த முனுசாமி உள்ளே ஓடினான். அந்த அம்மாவும் சிம்மாசன மேடைக்கு வந்தாள்.

'பரவாயில்லையே மூன்று மணி நேரத்திலே முடிச் சுட்டியே...??

என்ன முனிசாமி இவன் என்ன சொல்றான், ?? (Լք βο

  • வீட்டுக்கு சீக்கிரமாகப் போகணுமாம். கொஞ்சம் பிரச்சினையாம்.’’

'பிரச்சினை இல்லாத நாடு எது வீடு எது. ஏய் சுதாமா. நம்ப கந்தப்பாவுக்கு பக்கடாவும் டீயும் கொண்டு வாடி பாவம். ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.

சுதாமா சொல்லப் பொறுக்காமல் ... ஏற்கனவே சொல்லப் பட்டவள் போல், ஒரு ஈயத்தட்டில், பக்கடாச் சிதைவுகளை யும் கண்ணாடி டம்ளரில் உயும் கொண்டு வந்தாள், இப்போது, தன் பங்கு குறைந்து போன ஆத்திரத்தில் அந்த தட்டை கந்தய்யாவின் கையில் சுடச்சுட வைத்தாள். ஆனால் காய்ப்பு கைக் கொண்ட கந்தய்யா டீயை ஒரே மடக்கில் குடித்தார். பக்கடாவை பசங்களுக்காக மடிக்குள் வைக்கப் போனார். பிறகு, அதுகளுக்கு பிரியான வாங்க போவதை நினைத்துக் கொண்டார். குருவி கூடு கொணட மரம் போக மீதி பதினான்கு மரத்துக்கு ஐந்து ரூபாய ரேட் படி எழுபது ரூபாய் அம்மா ஆறு ரூபாய் ரேட் போடுவாங்க. அப்போ சே கணக்கு வர மாட்டேங்க... எந்த காலத்திலே எழுபதுக்கு மேலே என னிப் பார்த்தேன்.

'ஏய் சுதாமா . இந்த ரூபாயை கந்தப்பனிடம் கொடு. மூணு மணி நேரத்துக்கு மூவைந்து பதினைந்து ரூபாய்தான். பாவம் நல்லவன். பொழைத்துப் போறான்.”

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/58&oldid=600516" இலிருந்து மீள்விக்கப்பட்டது