பக்கம்:பூநாகம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமூத்திரம் 55

திசையில் சுவரோடுகவராக அதே நிறத்தில், இருந்த கதவை தள்ளிக்கொண்டு, உள்ளே போனேன். அங்கே என் மகள் 'பிளஸ் டு மீனா, மோவாயையும் முன் தலையையும் படுக் கையில் மறைத்து குப்புறக் கிடக்கிறாள். பாவாடை தாவணி யானாலும், சல்வார் கமீஸானாலும் சரி, தன்னாலேயே அவை அழகுபடுகின்றன என்ற தோரணை காட்டும் அவள் , இப் போது இரு கண்களிலும் ஊளை பிறள உதட்டோரங்களின் இரு பக்கமும் எச்சில் கோடுகள் செதில் செதிலாக அருவருப் பாய் கிடக்கிறாள். அவள் பக்கத்துப் படுக்கையில் படுத் திருக்கும் எனது மகன் முள்ளம்பன்றி மாதிரி உடம்பைச் சுருக்கிக் கொண்டு கிடக்கிறான். மூக்கு ஒழுகுகிறது ஏறும் போதும் இறங்கும் போதும் ஒவ்வொரு படியாய் துள்ளிக் குதிக் கும் என் மகன் பல திரைப்படங்களைப் பார்த்ததாலோ என் னமோ, ஸ்லோ மோஷனில் ஓடுவது போல் நடந்தும், நடப் பது போல் ஒடியும் அழகு காட்டும், என் மகனை இந்தத் தூக்கம் இப்படி தாற்காலிக பிணமாக்கிவிட்டது.

என்னால் தாள முடியவில்லை. அவர்களை எழுப்பி விடப் போனேன். மகள், மகனையும், மகன், மகளையும் துரக்கத் தொல்லைகளாக நினைத்து கண்களை மூடிக் கொண்டே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டார்கள். அவர் களை அந்தக் கோலத்தில் பார்க்க மனமில்லாமல், வெளியே பால்கனி பக்கம் வந்தேன். மார்பளவு உயர்ந்த இரும்பு கிராதிகளின் மேல் உடம்பு வளைத்துப் போட்டுக்கொண்டு அந்தத் தெருவை கீழ்நோக்கி பார்த்தேன். ஒரே இருள் மயம். தெருவோர கார்ப்பரேஷன் விளக்குகள் எலும்புக்கூட் டிற்கு மேல் கண்ணாடித் தோல் போர்த்தப்பட்டு லேசு லேசான வெள்ளையாய் தோன்றின. ஆனாலும், அவற்றை யும் தூக்கம் பிடித்துக் கொண்டது. உள்ளே ஒளியில்லை. வெளியே வியாபித்த இருட்டுக்கு அது பயந்துவிட்டது. எல் லாம் இந்தத் துாக்கமே காரணம். தூங்காமைதான் ஆன்மா வக்கு அழகு சேர்ப்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/64&oldid=600522" இலிருந்து மீள்விக்கப்பட்டது