பக்கம்:பூநாகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பனிப் போர்

எனக்கு ஏனோ அங்கு நிலவிய இருள் பிடித்தது. இருளா அல்லது இருட்டா? இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. பகலில் நிழல் இருள் சூரியனின் சடலம் இருட்டு. எதுவோ.. எனக்கு இந்த இருள் பிடிக்கிறது. இந்த இருளுக்குள் ஒரு ஒளியைக் காண்கிறேன். நான் தூங்க மாட்டேன். நான் ஏன் தூங்கக்கூடாது? அசையும் பொருள், அசையாப் பொருள் அத்தனையும் தூங்கும்போது, எதிரே உள்ள வீடு களை முழுமையாக மறைத்து இருள் மயமாய் தோன்றும் தாவர சங்கமம் அசையும் நிலையிலிருந்து அசையா நிலைக் குச் சென்று தூங்கும்போது, நான் ஏன் தூங்கக்கூடாது? ஏனோ? எதுவோ?

நான் லேசாய் பயந்து போனேன். ஆனாலும் துTங் காதே, தூங்காதே’ என்று என்னுள்ளே ஏதோ ஒன்று சொல்லச் சொல்ல, நானும் எனக்குள்ளே அப்படி திருப்பி சொல்லிக் கொண்டேன். கண்களைத் திறந்து வைத்து தூக் கத்தை வழிமறித்தேன்.

அந்த அந்தகார இருளில், நிசப்தமே சப்தமாகியது. புறத் தில் ஏற்பட்ட அசைவின் மை, அகத்தை அசைவித்தது. ஏதோ ஒன்றுடன்-இருளுக்கும் ஒளிக்கும் அப்பாற்பட்ட ஒன்றில் ஐக்கியமானது போன்ற நினைப்பு . அந்த இருட்டே ஒளியானது போன்ற எண்ணம், தனித்துப் போவதை நினைவூட்டும் தனிமை. அதுவே அங்கும் இங்கும், எங்கு மாய், ஏகமாய், அநேகமாய், பிரகாசிக்கிறது. தலையின் உட்பக்கம் ஒரு குகையாகிறது. உச்சியில் ஒரு ஒளி. அந்த ஒளி வெள்ளத்தில் பிரபஞ்சம். நட்சத்திரக் குவியல்கள் . அண்ட அடுக்குகள். பேரடுக்குகள். நான் நிரந்தரம் என்ற ஒரு பூரிப்பு. இருள் ஒளியாகவும், ஒளியை இருளாகவும் பார்த்துப் பழக வேண்டும் என்ற ஒரு தத்துவச் சிந்தனை, தனிமையிலேயே, ஒரு தனித்துவம். நிரந்தரத்தைப் பற்றிய நினைப்பு. கூடவே ஒரு பயம். நான் ஏன் தூங்கக்கூடாது? இப்படி இருப்பதே ஒரு நிரந்தரம் என்றால். இது ஒரு நரக மாகாதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/65&oldid=600523" இலிருந்து மீள்விக்கப்பட்டது