பக்கம்:பூநாகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 57

எனக்கு லேசாய் பயம் பிடித்தது. வாழ்ந்தது தற்கா லிகம். வாழப்போவது நிரந்தரம் என்ற எண்ணம் و63560 نة هي இல்லை. வாழ்வுமில்லை. வாழப் போவதுமில்லை என்ற சிந்தனைச் சிக்கல். அது உள்ளத்தைப் பின்னப் பின்ன; அந்தப் பின்னலை பிரிக்கும் முயற்சியாக சிந்தனையைத் திசை திருப்ப முயற்சித்தேன். எனது அலுவலக தனியறைக் குள் மானசீகமாக நுழைந்தேன். அன்று பகலில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது நான் என் அறைக்குள் நுழையும் போது, வெளியே உள்ள ஊழியர்கள் எனது அறையை உற்றப் பார்த்துவிட்டு என்னைப் பார்க் கிறார்கள். லேசாய் சிரிக்கிறார்கள். நான் உள் ளே நுழைந் தால், நான் மகளாய் நேசிக்கும் என் அந்தரங்க உதவி யாளிப் பெண் அந்தப் பித்துக்குளி இன்னும் வரலை. அது இருந்தா இப்படிப் பேச முடியுமா என்று டெலிபோனில் பேசிக் கொண்டிருக்கிறாள். என்னைப் பார்த்ததும் டெலி போனை தொப்பென்று மேஜையில் போட்டுவிட்டு, பேச்சற்று மூச்சற்று வெளியேறுகிறாள். எனக்கு லேசாய் கோபம் வரு கிறது. ஆனாலும் சிரித்துக் கொள்கிறேன். அவளின் அநாக ரீகத்திற்கு நான் அநாகரிகத்தாலேயே பதில் அளிக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறேன். அதோடு, சின்ன வயதில் அம்மா என்னை தவிக்கவிட்டுச் சென்ற நாளிலிருந்து இத் தகைய அவமானங்கள் எனக்கு அத்துப்படி. ஆனாலும் மனசு ஏனோ கேட்கவில்லை. இந்தச் சமயத்தில் எனது இன்னொரு உதவியாளர் மாரிமுத்து உள்ளே வந்தான். எடுத்த எடுப்பிலேயே என்னைச் செல்லமாக இப்படி திட்டி

←Ꮘ fᎢ 6ö] •

'என்ன ஸார் அநியாயம். உங்க காதுபடவே இந்த பத்தினித்தங்கம் இப்படி பேசிட்டுப் போவுது நீங்க, அவளை இன்னும் விட்டு வச்சிருக்கீங்களே....உங்க இடத்தில நான் மட்டும் இருந்தால், இந்நேரம் அவள் சீட்டைக் கிழிச் சிருப்பேன். அதைக் கிழிக்கிறதுக்கு எவ்வளவோ காரணங் கள் இருக்கு. ஒரு வார்த்தை சொல்லுங்க. நான் பார்த்துக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/66&oldid=600524" இலிருந்து மீள்விக்கப்பட்டது