பக்கம்:பூநாகம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பனிப் போர்

றேன். ஏன் சார் இப்படி சிரிக்கிறீங்க? உங்களுக்கு நீங்களே இப்படி கண்டிப்பா இருக்கிற மாதிரி, பிறத்தியார் கிட்டேயும் கண்டிப்பா இருக்காட்டால் அந்த கண்டிப்பு ஒரு நடிப்பா யிடும். சிறுமை வரும்போதெல்லாம் அப்பப்ப வெடிக்கணும். மன சில இருக்கிற வெடிகளை வாய் வழியா விடணும் இல் லேன்னா ஒரேயடியா வெடிச்சுப் போயிடுவோம்.’’

நான் அசட்டையாய் இருப்பதைப் பார்த்துவிட்டு, அவன் போய்விட்டான். அவன் வாய் முனங்கியது. ஒரு வேளை அவள் எனக்கு கேட்கும்படி பேசியதை இவன் கேட் காமல் பேசுகிறானோ என்னமோ? மனம் சங்கடப்பட்டது. அனைவரையும் சமமாக பாவிக்கும் என்னைப் பற்றிய அவனது மதிப்பீடு என்னை எனக்குள்ளே தாழ்த்திக் கொண்டே இருந்தது. இப்படித்தான் அம்மா இறந்த சமயத் தில் வாத்தியார் ஏ.சி சி.ல சேர விரும்புறவங்கல்லாம், எழுந் திருங்க’ என்றார் நான் மற்ற மாணவர்களோடு எழுந்தேன. உடனே பக்கத்தில் இருந்த டிரில் மாஸ்டர் உன் உடம்பு தாளாது. உட்காருடா என்றார். நான் கூனிக் குறுகி உட் கார்ந்தேன். இப்போது ஏனோ எனக்கு அந்த நினைப்பு வந்தது.

நான் சிறுமை கண்டு தவித்தபோது கடைநிலை ஊழியனான கண்ணன் உள்ளே வந்தான். நான் முகத்தை கேள் வியாக்கிய போது 'ஸார். வீட்டில சொகமில்லே. பிள்ளைத் ,ாய்ச்சி. சிசேரியன்ல முடியுமோ என்னமோ... டெலிபோன் வந்தது. கொஞ்சம் பெர்மிஷன்” என்று இழுத் தான். உடனே நான் பதைபதைத்து இருக்கையிலிருந்து எழுந்தபடியே உடனே டாக்டரன்டே கட்டிட்டுப் போ.. பணம் தேவையா என்று கேட்டுவிட்டு, மீண்டும் அவனைப் பார்த்தபடி யே உட்கார்ந்தேன். அவனோ எனக்கு ஒண்னும் வேணாம் ஸார்.என் விட்டுக்காரிக்கு சுகப்பிரசவம் ஆகணும்னு கடவுள வேண்டிக்குங்க... நீங்க என்ன வேண்டி னாலும் அது நடக்கும். போன தடவை என் தம்பிக்கு வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/67&oldid=600525" இலிருந்து மீள்விக்கப்பட்டது