பக்கம்:பூநாகம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 61

'பயப்படாதேம்மா. தூக்கம் விழிப்பின் சத்துரு. ஞானத்தின் எதிரி. தூங்காமல் தூங்கும் சுகத்தை கற்றுக் கொண்டேன். எனக்குக் கிடைத்த ஞானோதயம் உங்க ளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை ஆனாலோ ஆசை கூடாது. புத்தர் மற்றவர்களுக்காக தனது நிர்வாணத்தை தானே மறுத்தது போல் நானோ உங்களுக் காக என் ஆசையை நானே விடாமலே வைத்திருக்கிறேன்.:

என் மனைவி அழுவதைப் பார்த்தேன். அவள் விம்மலைக் கேட்டேன். அவள் உள்ளறைக்குள் ஓடினாள். டெலிபோனை எண்களைச் சுழற்றினாள். 'சீக்கிரம் வாண்ணா. சீக்கிரம் வாண்ணா என்று அழுது கொண்டே அரற்றினாள். பிறகு என்னிடம் மீண்டும் வந்து மகனையும், மகளையும் என் இரண்டு தோள்களிலும் சாத்திக் கொண்டு விம்மினாள்.

இதற்குள், என் டாக்டர் - மைத்துனன் ஒரு காரோடு வந்தான். நன்றா நடக்கடிய என்னை, அவனும் அவளும் கைத்தாங்கலாய் படியிறக்கி காருக்குள் திணிக்கிறார்கள் குழந்தைகள் அம்மாவைப் பார்த்தபடியே அழுகின்றன அவளோ, அக்கம் பக்கம் பார்த்தபடியே கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். கால் மணி நேரத்தில் ஒரு மருத்துவமனையில் தனி அறைக்குள் திணிக்கப்படுகிறேன் ஸ்டெதாஸ்கோப் மாட்டாத ஒரு டாக்டர் என் மைத்துன னிடம் ட்ரான் ஸ்குலைளலர் கொடுத்தா சரியாயிடும். அதுல முடியாட்டா ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்! உங்க எமிஸ்டருக்கு ஆறுதல் சொல்லுங்க. அவரை எப்படியும் குணப்படுத்திடலாம்.’’ என்கிறார்.

என்னுள்ளும் ஒரு பயம். நேற்றிரவு முதல் என்னுள் ஏற் பட்டது அந்த கடைநிலை ஊழியன் சொன்னது போல் ஞான மா? அல்லது அந்த பெண் சொன்னது போல் பித்துக் குளித்தனமா? ஒரு வேளை ஒருவனுக்கு பைத்தியம் பிடித் தால், அவன சிந்தனை இப்படித்தான் இருக்குமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/70&oldid=600528" இலிருந்து மீள்விக்கப்பட்டது