பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


ஆகவே, நடுவரின் பொறுப்பு மாபெரும் மரியாதையுள்ள பொறுப்பு என்பதை பொறுப்பேற்கும் ஒவ்வொரு வரும் உணர வேண்டும்.

வேண்டாத முறை

எல்லோருமே நடுவர்களாக இருந்து சி றப்பாகப் பணியாற்றிவிட முடியாது. 'யாராவது ஒருவரைப் பிடித்து, இதோ இந்தப் போட்டியை முடித்துக் கொடு' என்று நடுவர் பொறுப்பை ஒப்படைப்பதை பூப்பந் தாட்டப் போட்டிகளில் சர்வ சாதாரணமாகக் காணமுடிகிறது.

வேண்டும். விதிகள் தெரிந்திருப்பவரையே, அதற்கென உகந்தவரையே அறிந்து நடுவராக்கிட வேண்டும். அப் பொழுதுதான் இனிய முறையில் எல்லாம் நடந்தேறும் என்பதை, சிறப்பாக போட்டிகள் நடத்தவேண்டும் என்று முன்வந்த உங்கள் மைேரதம் நிறைவேறும். திருப்தியும் ஏற்படும்.