பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

 கிடைக்கும் போதும், வகையாகப் பந்து அடிப்பதற்கேற்ற அமைப்பில் வரும் போதும், பந்தை அடித்தாடலாம்.

இவ்வாறு சக்தி படைத்த பின்னாட்டக்காரர்கள் தங்கள் கடமையை உணர்ந்து, கண்ணுங் கருத்துமாகப் போற்றி ஆடிவிட்டால், ஆட்டம் அழகாக அமைவதுடன், ஆர்ப்பாட்டமான வெற்றியையும் நல்கி விடும்.

இனி, அவர்கள் ஆடவேண்டிய முறைகளைக் காண்போம்.

1. பின்னாட்டக்காரர்களில் ஒருசிலர், கடைக் கோட்டுக்கு (End Line) அருகில் நின்று கொண்டு, சர்வீஸ் போடுவது உண்டு. ஆனால், ஐவர் ஆட்டத்தில் நடு ஆடுகளத்தைக் கடந்து, கொஞ்சம் முன்னே வந்து நின்று சர்வீஸ் போட்டால் நல்லது.ஏனெனில் முன்னே வந்து நின்று, எதிர்க்குழுவினர் எப்படி நிற்கிறார்கள்; எங்கே பந்தை அனுப்பினால் அதை எடுக்க அவர்களுக்குள் குழப்பம் நேரிடும் என்பதை அறிந்து கொண்டால், அதற்கேற்ப நன்றாக சர்வீஸ் போட வாய்ப்பு கிடைக்கும்.

2. பந்து அடிக்கடி வந்து போகின்ற ஆட்ட நேரத்தில், தனக்கு முன்னே நிற்கின்ற முன்னாட்டக்காரர் அல்லது மைய ஆட்டக்காரர் இடம் மாறிப்போய் (Out of Position) நின்று விடுவதுண்டு. அப்படி நின்று விடுகின்ற நிலையில், அவர்கள் இடத்திற்குப் பந்து திடீரென்று வந்துவிட்டால், அவர்களால் சரியாக எடுத்தாடிட கஷ்டமாகப் போய், தவறிவிடவும் நேரிடும். அதனால், இதுபோன்ற தருணங்களில் அவர்களது