பக்கம்:பூமியின் புன்னகை.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

•1 மெத்தப் பணம் பொருள் சேர்த்தவர் மத்தியிலே
மேலும் மேலும் பதவிகள் பெற்றவர் கட்சியிலே
செத்துப் பிழைத்திடும் ஏழையர் சார்பினிலே
செயல்கள் புரிந்திடும் தொண்டர்கள் குரலினிலே
சொத்துக் கணக்கென் றெருகுரல் எழுந்ததுமே
சோர்ந்து தளர்ந்து மிரண்டு விட்டார்!
பத்துக் குரல்கள் சேர்ந்தொன்றாய் அந்தப்
பாமரன் குரலை யடக்கி விட்டார்!

2 எத்தர் கூடிய கூட்டத்தில் மக்கள்
ஏழ்மையைப் பற்றிப் பேசி விட்டார்
அத்தர் புனுகுகள் வாசனை கமகமக்க
அழுது புலம்பி உருகி விட்டார்!
சொத்துக் கணக்கென் றொருகுரல் எழுந்ததுமே
சோர்ந்து தளர்ந்து மிரண்டு விட்டார்.
பத்துக் குரல்கள் சேர்ந்தொன்றாய் அந்தப்
பாமரன் குரலை யடக்கி விட்டார்!

பூ-3