பக்கம்:பூமியின் புன்னகை.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


•மண்ணாய்க் கிடந்தேனை மேலோர்நாள்
மண்ணியல்தேர் குலால னொருவன்.

கண்ணாற் கண்டு விட்டான்
கருத்தில் கொண்டு விட்டான்
 
எண்ணாற் சொலமுடியா நொடிப்பொழுதில்
என்னையொரு பானையென வனைந்திட்டான்

கிண்ணாரம் செய்கின்ற கடவித்வான்
கேட்டவிலை கொடுத்தென்னை வாங்கிவிட்டான்

மேடையிலே கடவித்வான் மடியினிலே
மோகனமா யொலித்துவருங் காலையிலே

கோடையிலே யொருநா ளடைமழையில்
கொட்டத்தில் நீரொழுகு மிடத்தினிலே

ஆடையிலே முடிவைத்தான் அன்னவன்றான்
ஆராத ஈரத்தோ டெனைமறுநாள்