பக்கம்:பூமியின் புன்னகை.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

53


தெம்புடனே நானொருவன் ஜெயித்துவரத்
தீருமுங்கள் துயரமெலாம்’ எனக்கூறிக்

கைகூப்பல் புன்சிரிப்பு கண்கலங்கல்
காலாற நடந்துவரல் பொதுப்பணிகள்

கையூட்டல் கூட்டங்கள் முடியுமட்டும்
கடைசிவரை மேடையினில் காட்சிதரல்

பொய்யறியாப் பொதுத்தொண்டின் அவதார
புருஷனைப்போல் வேஷமிடும் புதுக்கோலம்

மெய்யறிவு விளக்கங்கள் மேனாட்டு உதாரணம்
மேற்கண்ட வகையெல்லாம் நடப்பதுண்டு.

தேர்தல் முடிந்த பின்னோ
செலவுக்குக் கட்டும்வகை வென்றதனால்

யார்தலையிற் கைவைத்தால் லாபமாகும்
யார்செலவிற் காரியங்கள் ஆகலாகும்

(என்றே)


ஊர்நடுவிற் பெரியவனாய் உலாவுதற்கு
உதவியவர் பொதுமக்கள் என்றாலும்

கார்நடுவில் தனியமர்ந்து பவனிவரக்
கருதுவதே வாழ்வாகி மறந்து போனார்,
(மே-1970)

பூ-4