பக்கம்:பூமியின் புன்னகை.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இங்கே வந்து ஏன் பிறந்தீர்?



•ஏரோப்ளேன் ஏறிவந்து நாசூக்காய்
இறங்கியதும் மலர்மாலை புகைப்படங்கள்

காரோட்டம் மலர்க்கிரீடம் என்றெல்லாம்
கலகலப்பாய்ப் புகழ்வேட்டை ஆடிவிட்டு

போராடும் மக்களுக்குப் புதுவாழ்வும்
பொதுவான சமதரும நன்மைகளும்

தராாளமாய்த் தருவதற்கே நான்பிறந்தேன்
தயங்காதீர் என்றுரைக்கும் தன்னலத்தார்

மாறாட்டப் பேர்வழிகள் மதியிலிகள்
மனச்சாட்சிப் பெயர்சொல்லி இந்நாட்டை

வேறோடு சாய்த்திருப்பார் இவரெல்லாம்
வீணுக்குப் பிறந்தழிக்கும் இம்மண்ணில்

ஓராடை முழந்தாளின் மேலுடுத்த
உத்தமராய்ச் சத்தியமாய்ப் பேரொளியாய்