பக்கம்:பூமியின் புன்னகை.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





நாற்காலிகளும் மனிதர்களும்





•சில நாற்காலிகள் நல்லவையாயுள்ளன
அவற்றில் அமரும் மனிதர்களைக்

கழித்து விட்டுக் காணும் போது,
வேறு சில மனிதர்கள் நல்லவர்களாயிருக்கிறார்கள்

அவர்கள் அமரும் நாற்காலிகளைக்
கழித்து விட்டுப் பார்க்கும் போது.

மனிதர்களும் நாற்காலிகளும் சேர்ந்தே
மாண்புடனிருக்கும் உதாரணங்களை

எத்தனை தேடினாலும் கிடைப்பதில்லை.
சில நாற்காலிகளில் ஏதோ கோளாறுகளை

அவற்றில் அமரும் சிலர் உண்டாக்கி
விட்டு விடுகிறார்கள் போலும்.

சில மனிதர்களில் ஏதோ கோளாறுகளை
அவர்கள் அமரும் நாற்காலிகள்