6
பூமியின் புன்னகை
போட்டி பொறாமை பகைமைகளைச்-சிறு
பொய்ம்மைக் கலகப் பூசல்களைக்
காட்டு மனிதன் வளர்ந்த பினும்-மிகு
காட்டுத் தனமாய் நடப்பதனைக்
கூட்டம் கூடிப் பிரிவதனைத்-தத்தம்
கொள்கைகள் மதங்கள் சாதி என்றே
ஆட்டம் போடுதல் கண்டே-நம்
அன்னை பூமி சிரிக்கின்றாள்!
மனிதனை மனிதன் மாய்ப்பதனைச்-சிலர்
மதங்களின் பெயரால் மடிவதனைக்
கனிதனை விட்டுக்கா யினைநாடலை-வெறும்
கயமையின் வகைகள் கவனமாவதை
அணிதனைச் சேர்த் தழிவுகள் செய்வதை-அண்டை
அயலவர் வாழஅனு மதியாததைப்
பிணிதனைச் சோர்வைப் பீடையை-மனப்
பெருமைகள் இல்லாக் கீழ்மையை
நாள்தோறும் பார்த்துப் பார்த்தே-அவள்
நகைக் கின்றாள் விலாப் புடைக்க
ஊர்தோறும் இடந்தோறும் ஒவ்வொருநாள்-விடியும்
வைகறையும் வகை வகையாய் நிறநிறமாய்ப்
பேர்வேறாய் மணம்வேறாய்ப் பூமித்தாய்-இங்கு
பூப்பூவாய் நகைப்பதையே பார்க்கின்றோம்.
ஆர் வேறு சொன்னாலும் நம்புகிலேன்-இதன்
அந்தரங்கம் நானறிவேன் நன்கறிவேன்!