பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பூர்ணசந்திரோதயம்-1 கொடுக்கும் முகாந்திரத்தை வைத்துக்கொண்டு நான் உன்னிடத்தில் நெருங்கிப்பேசி என்னுடைய மனசை வெளியிட எண்ணியே நான் இங்கே வந்தேன். நான் இப்போதுதான் புதிதாக உன்னைப் பார்க்கிறவன் அல்ல. நீ என்றைய தினம் இந்த மாளிகைக்கு வந்தாயோ அதுமுதல் ஒவ்வொருநாளும் எத்தனை தடவை நான் உன்னைப் பார்த்துப் பார்த்து உன்னுடைய அபாரமான அழகைக் கண்டு மயங்கி அறிவு இழந்து பைத்தியம் கொண்டவன் போல அலைந்து திரிந்தேன்! நான் இதுவரையில் எவ்வளவோ அற்புதமான அழகுள்ள ஸ்திரீகளை எல்லாம் பார்த் திருக்கிறேன். இருந்தாலும், உன்னைக் கண்டு என் மனம் கலங்கியதுபோல அவ்வளவு கட்டுக்கு அடங்காமல், வேறே எவளைக் கண்டும் கலங்கவில்லை. நான் கலியாணமே செய்து கொள்ளக் கூடாதென்று இதுவரையில் உறுதி செய்து கொண்டிருந்தேன். உன்னைப் பார்த்தபிறகு, அந்த உறுதியெல்லாம் இருந்த இடம் தெரியாதபடி பறந்துபோய் விட்டது. உன்னைக் கல்யாணம் செய்து கொண்டு என்னிடத்தில் அளவில் அடங்காமல் குவிந்து கிடக்கும் செல்வத்தை எல்லாம் உன்னுடைய பிரியப்படி செலவிட்டு இந்த உலகத்திலுள்ள சகலவித இன்பங்களையும் நாம் இருவரும் அநுபவித்து சதாகாலமும் ஆனந்தமாக இருக்கும்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது. அந்த முக்கியமான விஷயத்தை உன்னிடத்தில் பிரஸ்தாபிக்க வேண்டும் என்ற கருத்தோடுதான் நான் இன்றையதினம் இங்கே வந்தது. நான் உன்னிடத்தில் வந்து சம்பாவிக்கும் படியான சந்தர்ப்பத்தை உண்டாக்கிக்கொள்ள நான் இப்படிப்பட்ட தந்திரம் செய்ததைப்பற்றி நீ என்மேல் ஆயாசப்படக் கூடாது. நான் நல்ல எண்ணத்தோடு இப்படிச் செய்தேனே அன்றி, உன் விஷயத்தில் எவ்விதமான கெட்ட எண்ணமும் கொண்டு இப்படிச் செய்யவில்லை. என்னுடைய மனசையும் பிரியத்தையும் உயிரையும் ஒரே நொடியில் நீ கவர்ந்து