பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 பூர்ணசந்திரோதயம்-1 அவனோடு சென்று அவனது வரலாறுகளை எல்லாம் அவர் எப்படியும் அறிந்துகொண்டு விடுவார் என்றும் உறுதியாக எண்ணக் கொண்டவராய், அவ்விடத்தை விட்டு உள்ளேபோய் தமது லோபாவின் மீது முன்போல உட்கார்ந்து கொண்டார். அவரது மனம் முற்றிலும் சிறிது நேரத்திற்கு முன் தமக்கும் லீலாவதிக்கும், கலியாணராமனுக்கும் நடந்த சம்பாஷணை களிலேயே சென்று லயித்துப் போயிருந்தமையால், அவர் மற்ற விஷயங்களையெல்லாம் மறந்தவராக உட்கார்ந்திருந்த சமயத்தில் மணி மூன்று அடித்தது. அதேகாலத்தில் அவரது மாளிகையின் வாசலில், மிகவும் உன்னதமான ஒரு பெட்டிவண்டி வந்து நின்றது. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்திருந்த அழகான ஒரு ஸ்திரீ அந்த வண்டியிலிருந்து கீழே இறங்கினாள். அவளது வயது முப்பத்தைந்திற்குக் குறையாமல் இருக்கலாம். அவள் தனது மங்கைப்பருவத்தில் ஆடவரது கண்களையும் மனதையும் கவர்ந்து அவர்கள் மோகவெறி கொண்டு அலையச் செய்யக்கூடிய அபாரமான கட்டழகு வாய்ந்தவளாக இருந்தவள் என்பது அப்போதும் நன்றாகத் தெரிந்தது. அவளது தேகம் சிறிதளவு சதைப் பிடிப்பும் தழைப்பும் பெற்றிருந்தது. ஆனாலும், அவள் அப்போதும் யெளவன ஸ்திரீபோலவே மிகவும் வசீகரமாகக் காணப்பட்டாள். அந்த அழகிய மாதைக் கண்ட மருங்காபுரி ஜெமீந்தார் கரைகடந்த களிப்பும் குதூகலமும் அடைந்தவராய், தமது ஆசனத்தை விட்டு சடக் கென்று எழுந்து, 'அம் மணிபாயீ! வா வா' என்று மிகுந்த அன்போடும் புன்னகைபூத்த முகத்தோடும் எதிர்கொண்டு அவளை வரவேற்றுத் தமது ஸோபாவிலேயே அவளையும் உட்காரச் செய்ய, அவள் மிகவும் ஜிலுஜிலுப்பாக இருந்த தனது வசீகரமுகத்தை மகிழ்ச்சியினாலும் புன்னகையாலும் இனிமையாக மலர்த்தித் தனது அழகிய பல்வரிசைகளை இன்பகரமாக வெளியில்