பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பூர்ணசந்திரோதயம்-1 முதன்முதலில் உன்னைக் கண்டு உன்மேல் மோகம் கொண்டு உன்னுடைய சிநேகிதத்தை அடைந்தபொழுது, நீ எப்படி இருந்தாயோ அதுபோலவே இப்போதும் இருக்கிறாயே! அதன்பிறகு நீ என்னிடத்தில் நான்கு வருஷகாலம் இருந்திருக்கிறாய்; அதன்பிறகு இளவரசரிடத்தில் பதினைந்து வருஷகால மிருந்தாய். அவர் இப்போது உன்னை விட்டு இரண்டு மூன்று வருஷ காலம் ஆகிறது. ஆகக்கூடி உனக்கு இப்போது கிட்டத்தட்ட நாற்பது வயசாவது இருக்கலாம். முதன்முதலில் நீயும் நானும் சந்தித்தது எந்த இடம் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? நீயும் நானும் உல்லாசமாக இந்த இடத்தில் இருந்த காலத்தில், திடீரென்று இளவரசர் வந்துவிட்டாரே; அப்போது அதோ இருக்கும் கதவைத் திறந்து அதற்கப்பால் இருக்கும் ரதிகேளி விலாசத்துக்குள்ளே போய் ஒளிந்து கொண்டிருந்தாயே. அது நினைவிருக்கிறதா? அந்தக் காலமும் அந்த விளையாட்டுகளும் அந்த சந்தோஷமும் திரும்பிவரப்போகின்றனவா எல்லாம் இப்போது சொப்பனம் போல அல்லவா இருக்கிறது. நீயும் நானும் முதன் முதலில் சந்தித்தது இப்போதுதான் நடந்ததுபோல இருக்கிறது. எத்தனை வருஷங்கள் கழிந்து போய்விட்டன. பார்த்தாயா!' என்று மிகவும் உருக்கமாகவும் ஒருவித விசனத்தோடும் கூறி, பழைய நினைவுகளை எல்லாம் எண்ணிப் பெருமூச்சு விட்டார். அவரது சொற்களைக் கேட்ட அம்மணி பாயியும் மிகுந்த கலக்கமும், விசனமும் அடைந்தவள்போல நடித்து, 'ஆம்; தாங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். இருந்தாலும் தாங்கள் சொல்லும் ஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். தாங்கள் குடுகுடு கிழவனைப் போல ஆகிவிட்டதாக நினைப்பது சரியல்ல. தங்களுக்குத்தான் இப்போது அப்படியென்ன பிரமாதமாக வயதாகிவிட்டது? ஒன்றுமில்லை. தாங்களும் முன்போலத்தான் அழகாக இருக்கிறீர்கள். தங்களுக்கென்ன ஆண்பிள்ளைச்சிங்கம், பெண் பிள்ளைகளுக்குத்தான் சதைப் பிடிப்பும் மேனியும் முகக்களை