பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 207 உண்டாகிவிட்டது. இப்போது அவசரமாக மூவாயிரம் ரூபாய் வேண்டும் அவ்வளவுதான். எல்லாவற்றையும் சேர்த்து நான் மொத்தமாக அதிசீக்கிரத்தில் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றாள். ஜெமீந்தார், "சரி, அப்படியே தருகிறேன்..ஏது உனக்கு அவ்வளவு பெரியதொகை தேவையானது? ஏதாவது நகைகள் வாங்கினாயா?" என்றார். அம் மணிபாயி, "அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு இருக்கும் நிலத்திலிருந்தும் வட்டிக்குப் போட்டிருக்கும் பணத்திலிருந்தும் எனக்கு எதேஷ்டமாகப் பணம் வருகிறது என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். இருந்தாலும் சென்ற இரண்டொரு மாசகாலமாக நான் எதிர்பார்க்காத ஏதேதோ செலவு எல்லாம் வந்து சேர்ந்து விட்டது. எல்லாம் உருப்படி யில்லாத சிறுசிறு செலவுகளே என்றாள். ஜெமீந்தார், 'ஒருவேளை சாமளராவ் வீண் டம்பச் செலவு செய்ய ஆரம்பித்து விட்டானோ?” என்றார். அம்மணிபாயி, "அவனுக்கும் கொஞ்சம் செலவு அதிகமாகத் தான் பிடிக்கிறது. அவன் தக்க பெரிய மனிதர்களோடு சிநேகமாக இருப்பது பற்றி அவனும் கொஞ்சம் பெரிய மனுஷத்தனம் வகிக்க வேண்டியதாகத்தானே இருக்கிறது. இருந்தாலும், அவன் நல்ல பையன்; நான் கஷ்டப்பட அவன் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்' என்றாள். ஜெமீந்தார், "ஓ! அவன் நல்ல தங்கமான பிள்ளையல்லவா! அவன் எங்களிடத்திலும், உயிருக்குயிராக அல்லவா நடந்து கொள்ளுகிறான். சரி; எப்படியாவது இருக்கட்டும். நீ இங்கே இரு; நான் போய்ப் பணம் எடுத்துக் கொண்டு வருகிறேன்' என்று கூறியவண்ணம் அவ்விடத்தை விட்டு எழுந்து இரும்புப் பெட்டியண்டை போய், மூவாயிரம் ரூபாய்க்கு நோட்டுகள் எடுத்துக்கொண்டு திரும்பி வந்தார்.