பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பூர்ணசந்திரோதயம்-1 வாங்கிக் கொண்டு போகவேண்டும் என்ற ஓர் எண்ணம் தோன்றியது. ஆகையால் அவள், நாலைந்து தெருக்களுக்கு அப்பாலிருந்ததும், தாங்கள் வழக்கமாகக் கடன் வாங்குவ துமான ஒரு மளிகைக் கடைக்குள் நுழைந்து, சில சாமான்களை வாங்கி எடுத்துக் கொண்டு, கடையைவிட்டு பாட்டைக்கு வர, அந்தப் பாட்டையின் எதிர்பக்கத்தில் நின்று கொண்டிருந்த காஷாய வஸ்திரம் பண்டாரம் அவளது திருஷ்டிக்குத் தென்பட்டார். பாங்கியிருந்த தெருவை விட்டுத்தான் வேறொரு தெருவில் திரும்பியபோதே அந்தப் பண்டாரம் பிரிந்து போயிருப்பார் என்று அவள் நினைத்திருந்தாள் ஆதலால், அவர் அந்த நாலைந்து தெருக்களிலும் நடந்து தன்னோடு மளிகைக்கடை வரையில் வந்திருந்த விஷயம் அவளது மனதில் சுருக்கென்று உறைத்தது. அந்தப் பண்டாரம், மேலே போயிருந்தால் அவரும் அவ்விடத்தில் ஏதோகாரியார்த்தமாகப் போகிறார் என்று நினைக்க ஏதுவிருந்தது. அவர்கடைக்கெதிரில் நின்ற விஷயமே அவளது மனதில் மிகுந்த கவலையையும் கலக்கத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்கியது. இருந்தாலும் அவள் தனது மனோசஞ்சலத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் குனிந்த தலையோடு நடக்கலானாள். அந்தப் பெண்பாவை வெளியில் வருகிற வரையில் பாட்டையின் ஒரமாக ஒதுங்கி வேறே எதையோ கவனிப்பவர் போல நின்ற பண்டாரம், அவள் வெளியில் வந்து நடந்ததைக் கண்டு, 'அம்மா குழந்தாய் ! ஒரு வார்த்தை' என்று கூறி, அவளை அழைத்தவண்ணம், அவளை நோக்கி விரைவாக நடந்துவர, ஷண்முகவடிவு திடுக் கிட்டு நடுநடுங்கி நாணத்தோடு குனிந்து நின்று, பண்டாரத்தை நோக்கி, 'ஐயா என்னையா கூப்பிடுகிறது? ஏன்?' என்று மிருதுவாக வினவினாள். அதற்குள் அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்ற பண்டாரம், 'அம்மா! நீதானே இப்போது செட்டியார்பாங்கியில் பணம் வாங்கிக்கொண்டு வந்தது?" என்று அருளும், அன்புச் சொட்டச் சொட்டத் தேன்போல மொழிய, அதைக் கேட்ட