பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பூர்ணசந்திரோதயம்-1 இருப்பதால், இது குற்றமான செய்கையாகாது. மனிதருக்குப் பேரின்பத்தை மாத்திரம் அளிக்கக்கூடிய கடவுள் ஈசுவரன். உன்னைப்போன்ற ரூபலாவண்ணியமும், உத்தம லக்ஷணங் களும், புத்தி தீrண்யமும் வாய்ந்த பெண்கள் இந்த உலகத்தில் சிற்றின்ப சுகமும், அடுத்த உலகத்தில் பேரின்ப சுகமும் ஆகிய இரண்டையும் ஒருங்கே மனிதருக்கு உண்டாக்கிக் கொடுக்க உதவி செய்யும் உயிர்க் கடவுள்கள். ஆகையால், அந்தக் கடவுளை ஆயிரம் பெயர்கள் சொல்லி ஸ்தோத்திரம் செய்தாலும், என்னுடைய ஆவல் அடங்காது; ஆசையும் தீராது. அப்படி நான் ஸ்தோத்திரம் செய்வதும் குற்றமாகாது” என்று அன்பே நிறைவாகவும் தம்மை மறந்து நிரம் பவும் உருக்கமாகவும் பேசினார். இதன் தொடர்ச்சி 2ம் பாகத்தில் தொடரும்......