பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 அவரிடத்தில் அப்படிப்பட்ட அபாரமான கவர்ச்சி நிறைந்திருந்த காரணத்தினாலேதான் அவரைக்காட்டிலும் வயதில் மிகவும் குறைந்து அதியெளவன பருவத்தினளாகவும் அதிசுந்தர ரூபிணியாகவும் இருந்த அந்த அணங்கு தனது சொந்தக் கணவனை வெறுத்து அவரைத் தனது உயிருக்கு உயிராக நினைத்துக் காதலிக்க நேர்ந்ததென்பது கூறாமலே விளங்கும். அவ்வாறு, அந்தக் கள்ளக் காதலர் இருவரும் கட்டுக்கடங்கா ஆவலோடும் ஆசையோடும் ஆலிங்கனம் செய்து சரஸ் லீலைகள் புரிந்தவண்ணம், மஞ்சத்தின்மீது உட்கார்ந்துகொள்ள, உடனே அந்தக் காதலர் அவளை நோக்கிக் கொஞ்சலாகப் பேசத் தொடங்கி, 'கண்ணே நான் கடைசியாக உன்னிடத்தில் வந்து இப்படிப் பட்ட சொர்க்கபோகம் அநுபவித்துச் சரியாக இரண்டு மாசகாலம் ஆகிவிட்டதல்லவா! அடடா இந்த இரண்டு மாசமும் கழிவது எப்படி இருந்தது தெரியுமா? இரண்டு கற்பகாலம் கழிவது போலவே இருந்தது. என் மனம் பட்ட பாட்டை நரக வேதனைக்கே ஒப்பிட வேண்டும். உன்னை நினைத்து நினைத்து ஏங்கி நான் எத்தனை ராத்திரி தூங்காமலிருந்தேன்; எத்தனை நாள் அன்னத்தையே பார்க்காமல் பட்டினி யிருந்தேன் தெரியுமா? இந்த இரண்டு மாசத்திற்குள் என்னுடைய உடம்பு துரும்பாக மெலிந்து போய் அடையாளம் தெரியாதபடி உருமாறிப் போயிருப்பதை நீ கவனித்தாயா? ஒருவேளை நீ என்னை மறந்து போய் விட்டாயோவென்று நான் எத்தனை தடவை சந்தேகித் திருப்பேன் தெரியுமா? என்று மிகவும் உருக்கமாகவும் கனிவாகவும் கூறினார். அதைக் கேட்ட அந்தப் பெண், அவரைக் காட்டிலும் அதிகமாக இளகி மிகுந்த வாஞ்சையோடு பேசத் தொடங்கி, "ஐயோ! நான் என்ன செய்வேன்! இந்தக் கிழவனுக்கு வரவர என்னவோ கேடு காலம் அதிகரித்துப் போய்விட்டது. இதற்கு முன்அடிக்கடி எங்கேயாவது ஊருக்குத் தொலைந்துபோவான்;