பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பூர்ணசந்திரோதயம்-1 சிநேகம் செய்ய இடம் கொடுக்கலாம் என்பது போல இருக்கிறது. - இளவரசர் (மகிழ்ந்து புன்னகைசெய்து) நீ பேசுகிறதைப் பார்த்தால், இந்த விஷயத்தில் நான்முயற்சிக்க வேண்டுமென்று தூண்டுகிறதுபோல இருக்கிறது. அப்படித்தானா? திறந்து பேசு. சாமளராவ்: (சிரித்துக்கொண்டு) ஆம் அப்படித்தான். நாங்கள் எல்லோரும் எவ்வளவுதான் முயற்சித்தாலும், இந்தக் காரியத்தில் ஜெயமுண்டாகும் எனத் தோன்றவில்லை. அவள் மசிந்தால் தங்கள் ஒருவருக்குத்தான்மசியவேண்டும். இளவரசர்:- அப்படியல்ல; இந்த மாதிரி அபூர்வமாகக் கிடைப்பதையெல்லாம் நான் ஒருவனே அடைவது நியாயமும் ஆகாது; அது சிநேகிதத்துக்கும் லக்ஷணமல்ல; நீங்கள் எல்லோரும் எனக்கு முன்பாகவே அவளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கிறீர்கள். மருங்காபுரிக் கிழவருக்கு இப்போதே நாக்கில் ஜலம் ஊறுகிறது. ஆகையால், நான் ஒருவன் மாத்திரம் ரகசியமாக முயன்று அவளை அடைவது அவ்வளவாக ருசிக்காது. எதிலும் போட்டியும் பந்தயமும் இருந்தால்தான் சுகப்படும். ஆகையால், நாம் ஆறுபேரும் தனித்தனியாக முயற்சித்துப் பார்ப்போம். அவள் யாரிடத்தில் பிரியம் கொள்ளுகிறாளோ கொள்ளட்டும். அதுதான் பிரம்மாநந்தமாக இருக்கும். மரு. கிழவர்: பேஷ் பேஷ் இப்போதுதான் நம்முடைய இளவரசர் நடுநிலைமை தவறாத நியாயஸ்தர் என்பது வெளியாகிறது. அப்படியே செய்வோம். எனக்கும் அவள் விஷயத்தில் மனசு ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. கலி.மிட்டாதார்:- பந்தயம் போட்டு ஜெயித்தால்தான் பெருமைக்குப் பெருமை, சந்தோஷத்துக்குச் சந்தோஷம். சூர. பாளையக்காரர்:- அதுதான் சரியான காரியம்; நானும் அப்படித்தான் நினைத்தேன்.