பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பூர்ணசந்திரோதயம்-1 அப்படியிருக்க, என்னிடத்தில் தாங்களே நேரில் வந்து இப்படிப்பட்ட தகாத வார்த்தைகளைச் சொல்லலாமா? இந்த ஊரில் மகாராஜனுடைய பெண்ணிருக்கிறாளே, அவளிடத்தில் தாங்கள் போய் இப்படிப் பேசுவீர்களா? நான் கலியாணம் ஆகாதவளென்பது நிஜமாகவே இருக்கட்டும். அப்படி இருந்தாலென்ன? கலியாணம் ஆகாத குடும்ப ஸ்திரீகளெல்லாம் தேவடியாளுக்குச் சமமென்பது தங்களுடைய எண்ணமா? என்னுடைய உண்மையான யோக்கியதை எப்படிப்பட்ட தென்பதையும், நான் இப்பேர்ப்பட்ட துன்மார்க்க வார்த்தைகளை எல்லாம் விரும் பக்கூடியவளா அல்லவா என்பதையும் அறிந்துகொள்ளாமல், தாங்கள் இப்படி வந்து என்னிடத்தில் தாறுமாறாகப் பேசலாமா? அன்னிய புருஷர்கள், கலியானமான ஸ்திரீகளோடு ஒருவேளை பேசினாலும் பேசலாம்; எங்களைப்போன்ற'கலியாணமாகாத கன்னிகா ஸ்திரீகளோடு பேசுவதே கூடாதே; ஏதோ ஆபத்துக்குப் பாபமில்லையென்று இப்படிப்பட்ட எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்போது கட்டாயமாகப் பேச நேர்ந்தாலும் எது காரியமோ அதைப் பற்றி மரியாதையாகப் பேசிவிட்டுப் போவதே தகுமன்றி, வேறு வித்தியாசமான வார்த்தைகளை உபயோகிப்பது, தங்களைப் போன்ற தக்க பிரபுக்களுக்குக் கொஞ்சமும் அடாத காரியம். நான் நெடுநேரமாகத் தனியாக இருந்து பேசுவதைக் கண்டு என்னுடைய சிப் பந்திகளும் வழிப்போக்கர்களும் என்னைப் பற்றி ஏதாவது தவறான அபிப்பிராயம் கொள்வார்கள். ஆகையால், நான் உள்ளே போக உத்தரவு பெற்றுக்கொள்ளுகிறேன். தாங்களும் தயைகூர்ந்து போய் வாருங்கள் என்று கூறியவண்ணம் தனது ஸோபாவை விட்டெழுந்து அப்பால்போகும் கருத்தோடு கானமயில் அடி பெயர்த்து வைப்பதுபோல இரண்டோரடி யெடுத்துவைத்து அன்னநடை நடக்கலானாள். அந்தச் சமயத்தில் கலியாணபுரம் மிட்டாதாரின் மோகவெறி உச்சநிலையை அடைந்திருந்த மையால், அவரது தேகம் கட்டுக் கடங்காமல் துடிதுடித்துப்