பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பூர்ணசந்திரோதயம்-3 திகைப்பும், திகிலும் எழுந்து, அவளது மனத்தில் அதுவரையில் கொந்தளித்தெழுந்த காமாந்தகாரத்தை ஒரேநொடியில் விலக்கி, அவளது உணர்வைப் பிடித்து வலுவாகக் கவர்ந்து கொண்டன. அவள் தன்னை மறந்துவாய்விட்டு, 'என்ன ஆச்சரியம்! அந்த மோசக்காரச் சிறுக் கி ரகசியத்தை எல்லாம் வெளியிட்டு விட்டாளா, அவள் இப்போது எங்கே இருக்கிறாள்? நீங்கள் அவளை எப்போது எவ்விடத்தில் கண்டது?’ என்று ஆவலோடு வினவினாள். கலியாண:- அவள் உங்களுடைய வீட்டைவிட்டுப் புறப்பட்ட தினத்துக்கு மறுநாளைக்கு மறுநாள் இரவில் கருந்தாட்டங் குடியிலிருந்து தஞ்சாவூருக்கு வரும் வழியில் அவளை நான் கண்டேன். அவள் இப்போது பத்திரமான ஒர் இடத்தில் செளகரியமாகவும், தக்க மனிதர்களுடைய பாதுகாப்பிலும் இருக்கிறாள். நான் இதற்கு முன் உங்களோடு பழகிய மனிதனல்ல. ஆனாலும், நான் உங்களோடு பழகும் இந்த இரண்டு தினமாக, என்னுடைய நாணயத்திலாவது நடத்தை யிலாவது ஏதாவது தவறு இருப்பதாக நீகண்டதுண்டா? இல்லையென்றே நான் துணிந்து சொல்லக் கூடும். நான் உலக அதுபோகம் இல்லாத சிறியவன் என்பது உண்மையானாலும், இந்த விஷயத்தில் எப்படியாவது முயன்று நீங்கள் செய்ய உத்தேசிக்கும் மகா கொடுமையான காரியம் முற்றிலும் அக்கிரமமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்ற எண்ணம், தடுக்கமுடியாமல் என்னைத் தூண்டிக் கொண்டே இருப்பதால், நான் துணிந்து இந்தக் காரியத்தில் இறங்கி இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து கொண்டு வந்தது. ஆகையால், நீ நன்றாக, ஆற அமர யோசித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் இந்த அக்கிரமத்தில் இறங்குவது தருமமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த இளவரசியும் உங்களைப் போல ஒரு பெண்பால். வங்க அம்மாளின்மேல் அபாண்டமான பழியை நீங்கள்