128 - பூர்ணசந்திரோதயம்-3 என்று பொப் சொல்லி மறைத்து வைத்திருக்கிறார் என்ற எண்ணம் உறுதிப் பட்டது. பெரிய பூதத்தைப் போலக் காணப்பட்ட அந்த மனிதன் தனது ஜாகைக்குள் சில தினங்களாக ஒளிந்துகொண்டிருக்கிறான் என்ற நினைவு உண்டாக உண்டாக, இன்னது என்று விவரிக்க முடியாத ஒரு வித பீதியும் நடுக்கமும் தோன்றி அவளை அளவற்ற சஞ்சலத்தில் ஆழ்த்தின. கொள்ளைக் கூட்டத்தாரைச் சேர்ந்தவனும், கேவலம் பினத்தைப் புதைக்கக் குழிவெட்டக் கூடியவனும், அண்டாவி லிருந்து வெளிப்படுத்தப்பட்ட பரமவிகாரமான பிணத்தைச் சிறிதும் அருவருப்பின்றி அலட்சியமாக எடுத்துச் சென்றவனு மாகிய அந்த மனிதன் கேவலம் தோட்டி ஜாதியைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டானது. ஆகையால், அப்படிப்பட்ட இழிவான மனிதனைத்தனது புருஷர் சரிசமானமாக வீட்டிற்குள் சேர்த்து வைத்துக்கொண்டு அவனுக்கு உபசரணைகள் புரிந்து வருவது, அவளால் நினைக்கவும் சகிக்காத மகா அசங்கியமான விஷயமாகவும், சிறிதும் நம்பக்கூடாத அசம்பாவிதமான காரியமாகவும் இருந்தது. ஆகையால், அவள் திகைத்துப் பிரமித்து ஸ்தம்பித்து அரைக்கால் நாழிகை நேரம் வரையில் அப்படியே நின்றுவிட்டாள். சிறிதுநேரத்தில், அவனது காலடியோசை ஒய்ந்து போய்விட்டது. அவன் மேன்மாடிக்குப் போய்விட்டான் என்று அவள் நிச்சயப்படுத்திக் கொண்டு மெதுவாகப் படுதாவை விட்டு வெளியில் வந்து, சந்தடி செய்யாமல் தனது சயன அறையை அடைந்து வாசலின் மேல் நிலையில் நாதாங்கியில் அதன் அடிப்பாகத்திலிருந்த இரும்புத் தகட்டைக் கதவிலிருந்த துவாரத்தில் வைத்து உள்ளே தள்ளிவிட்டு அறைக்குள்நுழைந்து கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டாள். உட்புறத்தில் நீட்டிக் கொண்டிருந்த இரும்பின் இரண்டு பிளவுகளையும் இருபக்கங்களிலும் மடக்கி முன்னே இருந்தபடி சுத்தமாக அழுத்திவிட்டு, தோட்டக்காரியினது வருகையை நிரம்பவும்
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/132
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை