பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பூர்ணசந்திரோதயம்-3 கொள்ளவேண்டும். இப்போது இவர்கள் உங்களை அழைத்துக் கொண்டு போய்விட்டால், அதன்பிறகு நான் இங்கே தனியாக இருந்து என்ன செய்கிறது? மேலே நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி எனக்கு என்ன யோசனை சொல்லுகிறீர்கள்?’ என்று பணிவாகவும் கவலையோடும் கேட்டாள். மாசிலாமணிப்பிள்ளை இரண்டொரு நிமிஷநேரம் சிந்தனை செய்தவராய் நிரம்பவும் பச்சாதாபத்தோடு, 'லீலாவதி! எப்போதும் நீ என்னைவிட்டுப் பிரிந்து தனியாக இருந்து அறியாதவள். நான் இப்போது போனால், திரும்பிவர, எவ்வளவு காலம் பிடிக்குமோ என்னவோ தெரியவில்லை. குறைந்தது ஒரு மாச காலமாவது ஆகும் எனத் தோன்றுகிறது. அது வரையில் நீ இந்தப் பங்களாவிலேயே தனியாக இருக்க முடியுமா? உன்னுடைய எண்ணத்தைத் தெரிவி' என்றார். லீலாவதி நிரம்பவும் கலங்கிக் கண்ணிர் விடுத்தவளாய்ச் சிறிது நேரம் யோசனை செய்து, 'இவர்கள் உங்களைக் கொண்டுபோய் விசாரணை முடிகிறவரையில் தஞ்சாவூர்ப் பெரியகோவிலுக்கு அருகிலுள்ள சிறைச்சாலையில் அடைத்து வைத் திருப்பார்கள் என்று நீங்கள் முன்னொரு நாள் சொல்லியிருக்கிறீர்கள். இங்கே இருந்து அந்த இடம் சுமார் நான்கு மைல் தூரத்துக்குமேல் இருக்கும். நீங்கள் அங்கே இருக்க, நான் மாத்திரம் தனியாக இவ்வளவு தூரத்தில் இருக்க,என் மனம் எப்படிசகிக்கும்? உங்களுக்கு அங்கே என்ன நேருகிறது என்பதை அடிக்கடி பார்த்து அறிந்து கொண்டு அதற்குத்தகுந்தபடி முயற்சிகள் செய்யவேண்டும். உங்களுக்குச் சரியான ஆகாரம் முதலிய சகலமான செளகரியங்களையும் இவர்கள் ஒழுங்காக ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்று பார்த்து நீங்கள் யாதொரு குறைவும் இல்லாமல் இருக்கும்படி செய்ய வேண்டும். விசாரணை நடக்கும்போது நான் நேரிலிருந்து அதைக் கவனிக்க வேண்டும். நம்முடைய கட்சிக்கு