பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

మGఖG5. துரைசாமி ஐயங்கார் 185 சொல்லாமல் பொய்யான விஷயங்களையெல்லாம் சொல்லி இருக்கிறான் பார்த்தீர்களா? அவன் வேறே எங்கேயோதுங்கிக் கொண்டிருந்துவிட்டு நம்மிடம் வந்து அப்படிப்பட்ட தப்பான வரலாற்றையெல்லாம் சொல்லியிருக்கிறானே!" என்று தணிவான குரலில் கூறினார். உடனே பாளையக்காரர்கம்பீரமான தோற்றத்தோடு எழுந்து நின்று, 'பார்த்தீர்களல்லவா? இனியும் நீங்கள் என் வார்த்தையில் அவநம்பிக்கை கொள்ளமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்கே இருக்கும் முப்பதினாயிரம் ரூபாயை நான் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?" என்று கூறி பணத்தை அடைய தமக்குள்ள அளவற்ற ஆவலை வெளிப்படுத்த, அப்போது சபாநாயகர் என்ன செய்வது என்பதை அறியாமல் தமது தலையைத் தடவிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவராய் &ssost f : 1 – i_sssf. அப்போது சடேரென்று கதவை விசையாகத் திறந்து கொண்டு பூர்ணசந்திரோதயம் அவர்களுக்கு எதிரில் வந்து நிற்க, அவளுக்குப் பின்னால் பஞ்சண்ணாராவும் தொடர்ந்து எமகிங்கரன் போல வந்து நின்றான். ஆனால், ராமன் மாத்திரம் காணப்படவில்லை. - - பூர்ணசந்திரோதயம் தனது உடம்பை ஒரு விலை உயர்ந்த வெல் வெட்டு அங்கியால் மறைத்துக்கொண்டிருந்தாள். ஆனாலும், அவளது வசீகரமான சுந்தர முகம் மாத்திரம் நன்றாக வெளியில் தெரிந்தது. கோபமும், ஆத்திரமுமே வடிவமாக அவள் வந்திருந்தாள் என்பது அவளது கம்பீரமான நிமிர்வி னாலும் முகத்தின்ஜ்வலிப்பினாலும் நன்றாகத் தெரிந்தது. அவள் ஒரு சக்கரவர்த்தினிபோல வந்துநின்ற வீரரசக்காட்சி ஒப்பற்ற அற்புதக் காட்சியாகவும் வசீகரம் நிறைந்ததாகவும் இருந்தது. அந்த அழகிய பூங்கொடியும் பஞ்சண்ணாராவும் அவ்வாறு திடீரென்று அவ்விடத்தில் எதிர்பாரா விதமாகத் தோன்றியதைக்