பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பூர்ணசந்திரோதயம்-3 இந்தக் கலியாணசுந்தரம் என்பவருடைய பெயரே அது அல்லவாமே! அதுவாகிலும் உனக்குத் தெரியுமா?" என்றாள். அதைக் கேட்ட ஷண்முகவடிவு திடுக்கிட்டு, "என்ன ஆச்சரியம்! அவருடைய பெயரே அதுவல்லவா! அப்படி யானால் அந்தப் பெயர் பொய்யான பெயரா? அப்படியானால் உண்மையான பெயர் என்ன? ஒருவர் தம்முடைய பெயரை எதற்காக மறைத்துக் கொள்ளப் போகிறார்கள்? அதனால் என்ன லாபம் உண்டாகப் போகிறது? அவர் அப்படிப்பட்ட மோகத்தில் இறங்கக்கூடிய மனிதரே அல்லவே' என்றாள். அந்த ஸ்திரி, 'பாவம்! நீ ஒன்றையும் அறியாத சிறிய பெண் ணாக இருக்கிறாய். சகல விஷயத்திலும் அவர் உன்னை ஏமாற்றி விட்டதாகத் தெரிகிறது. கலியாணசுந்தரம் என்பது தம்முடைய பெயரல்ல என்பதையும், தாம் ஏதோ சில காரணங்களை உத்தேசித்துத் தம்முடைய சொந்தப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவரே போலீஸ் கமிஷனரிடம் ஒப்புக் கொண்டிருக்கிறாரே. பிறகு வேறு சாrதிகூட வேண்டுமா?’ என்றாள். - ஷண்முகவடிவு ஸ்தம்பித்துப்போய், 'அப்படியா அவரே ஒப்புக்கொண்டாரா? அப்படியானால் அவருடைய நிஜப்பெயர் என்னவாம்?' என்றாள். - அந்த ஸ்திரீ, “அதைப் போலீஸ் கமிஷனர் எங்களிடம் சொல்லவில்லை” என்றாள். ஷண்முகவடிவு, 'அப்படியானால் பெயரை மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் காரணத்தை முன்னிட்டே அவரைச் சிறைப் படுத்தி இருக்கிறார்களா? அப்படி மாற்றி வைத்துக்கொள்வது ஒரு பெரிய குற்றமாகுமா? ஒருவர்தம்முடைய பெயரை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுகிறார்கள். அதனால், அவர் யாருக்காவது கெடுதலாவது மோசமாவது செய்து விட்டாரா? ஒன்றுமில்லையே” என்றாள்.