பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பூர்ணசந்திரோதயம்-3 வேண்டும். இவள் இங்கே வருவதற்குமுன் நான் இவளிடம் கெட்ட விஷயம் ஏதாவது பிரஸ்தாபித்தால், இவள் என்னிடம் சொல்லாமல் புறப்பட்டுப் போய்விடுவாள் போலிருக்கிறது. இவள் நல்ல பரிசுத்தமான மனசையுடைய பெண்ணாக இருக்கிறாள். இவளுடைய மனசை மாற்றி இவளை வசப்படுத்திக் கொள்ள வேண்டியதெல்லாம் எஜமானரைச் சேர்ந்த பொறுப்பு. எஜமானருடைய கருத்துக்கு இசையச் செய்ய இவளுடைய சம்மதியின்மேல் நான் இவளை இங்கே கொண்டு வருவதாக இருந்தால் நான் எஜமானரிடம் சன்மானம் செய்யக் கூடவில்லை. மோசக்கருத்தாக நான் இவளை இங்கே கொண்டு வந்து விடப்போகிறேன். மற்ற சகலமான சிரமமும் பொறுப்பும் எஜமானருக்கு வந்து சேரப்போகின்றன. அப்படி இருக்க, இதில் எனக்கு அதிகப் பிரயாசைக்காவது புகழ்ச்சிக்காவது சன்மானத்துக்காவது இடமில்லை. எல்லாவற்றையும் எஜமானரே சாமர்த்தியமாக முடித்துக் கொள்ள வேண்டும். அதுவுமன்றி இந்தப் பெண் இந்த மாளிகையிலிருந்து தப்பி வெளியில் போகாமல் ஜாக்கிரதையாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றாள். ஜெமீந்தார், 'ஒகோ அப்படியா சங்கதி! நீ சொல்வதைப் பார்த்தால் இந்தப் பெண் இதுவரையில் புருஷர் முகத்தையே பார்த்திருக்கமாட்டாள் எனத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட புத்தம் புதிய வஸ்துவை அடைய வேண்டும் என்று தான் என் மனம் நெடுங்காலமாக ஆயாசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஆசை நிறைவேறும் காலம் இப்போதுதான் நேரிடுகிறது போல் இருக்கிறது. ஆசாமி இப்படித்தான் இருக்க வேண்டும். மற்றதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. மெதுவாக நீ அவளை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிடு. நானும் லீலாவதியும் சேர்ந்து இவளுடைய மனசைக் கலைத்து சரிப்படுத்திக் கொள்ளுகிறோம். இந்த மாளிகைக்குள் வந்தபின் அவள் தப்பித்துப் போகும் படி நாங்கள் விட்டு விடப்