பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O2 - பூர்ணசந்திரோதயம்-3 மடங்கு அதிக வனப்பு வாய்ந்தவையாகக் காணப்பட்டதும் ஒன்றுகூடி ஷண்முக வடிவினது மதியை மயக்கி பிரமிக்கச் செய்தன. அவளது ஐம்புலன்களும் அபரிமிதமான அந்த இன்பக் களஞ்சியத்தில் தோய்ந்து தெவிட்டி ஸ்தம்பித்து நிலைகலங்கி நின்றன. பார்க்குமிடத்திலெல்லாம் புதுமை புதுமையான வஸ்துக்களும், விநோத விநோதமான பொருள்களும், அதியற்புதமான காட்சிகளும் தென்பட்டனவாகையால் எதைப் பார்ப்பது, எங்கே பார்ப்பது என்பதை நிர்ணயிக்க மாட்டாதவளாய் அந்த இளந்தோகைமயில் குழம்பித் தவிக்க லானாள். கால் வைக்கும் இடங்களும், உடம்பு படும் இடங்களும் வழுவழுப்பாக இருந்தமையால் நடக்கும்போதே உணர்வு கலங்க, புலன் சொக்கத் தூக்கம் தலைகாட்டத் தொடங்கியது. அவ்வாறு மனிதரது ஐம் புலன்களையும், அறிவையும் போதையில் ஆழ்த்தத்தகுந்த அதிமனோக்கியமான சிங்காரங்கள் நிறைந்த அந்த மாடத்திற்குள் புகுந்த ஷண்முகவடிவுக்குத்தான் இருந்தது பூலோகத்திலோ, அல்லது, கந்தருவலோகத்திலோ, அல்லது மயன் முதலிய தெய்வ சிற்பிகளால் அமைக்கப்பட்ட மாய லோகத்திலோ, அல்லது சுவர்க்க லோகத்திலோ என்ற மலைப்புத் தோன்றியது. தான் தனது அக்காளையும் சோமசுந்தரம் பிள்ளையையும் கான வந்திருப்பதையும் தனது விசனங்களையும் அந்த மாணிளம்பேடு இரண்டொரு நிமிஷ நேரம் மறந்து பொறிகலங்கி நின்றுவிட்டாள். அடுத்த நிமிஷத்தில், அம்மணிபாயி முன்னால் போய்விட்டாள் என்பதைக் காணவே, அவள் தனது சுய உணர்வை அடைந்து அவளுக்குப்பின் நடந்து சென்றாள். தங்களுக்கு எதிரில் இனிய வசனத்தோடும் சிரித்த முகத்தோடும் தோன்றித் தங்களை நிரம்பவும் பட்சமாக வரவேற்ற பெரிய மனிதரே சோமசுந்தரம் பிள்ளையென்று அந்த இளநங்கை யூகித்துக் கொண்டாள். அநாதைகளாக இருந்த தங்களது. குடும்பத்தை நெடுங்காலமாக காத்து ரகசிக்கும் பேருபகாரி அவர்தான் என்பதை உணரவே, அவளது மனம் பேருவகையும்,