பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம் இரண்டாம் பாகம் தொடர்ச்சி ..... 24-வது அதிகாரம் ஸ்திரீ ஸாகஸம் அன்றைய பகற்பொழுது எத்தகைய புதிய சம்பவமும் இன்றி சாதாரணமாகக் கழிந்தது. பகல் போஜனம் நடந்த காலத்தில், அன்றையதினம் சாயுங்காலம் பெண்டீர் நால்வரும் வேலைக்காரிகளும் ஒன்றுகூடி அந்த நகரத்திற்குள் போய், எல்லா வேடிக்கைகளையும் பார்த்துவிட்டு, சாயுங்காலம் திரும்பி வருவது என்றும், அவர்கள் வருகிற வரையில் கலியாணசுந்தரம் அவ்விடத்தில் இருந்து, அவர்களது சாமான்களையெல்லாம் காவல் காத்திருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. பிற் பகல் நான்கு மணி சமய மாயிற்று. பெண்டீர் நால்வரும் தங்களிடத்திருந்த சிறந்த ஆடை ஆபரணங்களை எல்லாம் பொறுக்கி அணிந்து அற்புத அலங்காரத்தோடு ஊரைச் சுற்றிப் பார்க்க ஆயத்தமாயினர். அப்போது மூத்த பெண்ணான அம்மாளு என்பவள் தனக்குத் தலைவலி வந்துவிட்டது. ஆகையால் படுத்திருக்க நினைப்பதாகவும், தான் மறுநாள் சாயுங்காலம் ஊரைச் சுற்றிப் பார்க்க எண்ணுவதாகவும் கூறிப் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டாள். அதை உணர்ந்த கலியாணசுந்தரம் அந்தச் சம்பவத்தைப் பற்றி எவ்வித அபிப் பிராயமும் தெரிவிக்காமல் மெளனம் சாதித்தாலும், அந்த மூன்று பெண்களுள் ஒருத்தியோடு தனியாக இருந்து, தான் சம்பாவிக்கத் தகுந்த சந்தர்ப்பம் வாய்த்ததைப் பற்றித் தனக்குள் நிரம் பவும் சந்தோஷமும் மனஎழுச்சியும் அடைந்தவனாக