பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பூர்ணசந்திரோதயம்-3 ஆான்.அப்போது, அவனது அறையில் வெளிக்கும் இருந்தது. ஆகையால், அதன் ஜோதியில் அந்தப் பெண்ணினது வடிவம் நன்றாகத் தெரிந்தது. அவளுக்குச் சுமார் பதினான்கு அல்லது பதினைந்து வயது இருக்கலாம் என்று நன்றாகத் தெரிந்தது. அவளது கைகளின் அற்புத வனப்பிற்கு ஒத்தபடி அவளது உச்சி முதல் உள்ளங்கால் வரையிலுள்ள சகலமான அங்கங்களும் மகா அழகாகவும் வசீகரமாகவும் அமைந்திருந்தது அன்றி, அவள் ஒரு மகாராஜனது புத்திரிபோல உன்னதமான தோற்றமும் , செழுமையும், கொழுமையும் நிறைந்து சாமுத்திரிகா லட்சணத்துக்குச் சிறிதும் பழுதின்றி அமைந்த அங்கங்களும் வாய்ந்தவளாகக் காணப்பட்டாள். ஆனால், அவள் மகாராஷ்டிரப் பெண்கள் முகமூடி போட்டிருப்பது போலத் தனது முகத்தை ஒரு சல்லாயப் பட்டினால் ஆன முக மூடியால் மறைத்துக் கொண்டிருந்தாள். அவ்வாறு எதிர்பாராத அற்புத எழிலும் யெளவனப் பருவமும் வாய்ந்தவளாகத் தோன்றிய அந்த அணங்கை நமது கலியாணசுந்தரம் ஏற இறங்க இரண்டொரு முறை உற்று நோக்கினான். அதற்குமுன் தான் பார்த்து நிரம்பவும் நெருங்கிப் பழகிய ஒரு பெண்ணின் வடிவம் போலவே அந்தப் பெண்ணின் வடிவமும் இருந்ததைக் காண அவனது வியப்பும் சந்தேகமும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தன. உயரம், பருமன், நிறம், சாயல், நடை, குரல் முதலிய சகலமான அம்சங்களும், அதற்குமுன் அவனோடு பழகிய ஒரு பெண்ணினுடையவை போலவே இருந்தன. ஆகையால், அவள் யாராக இருக்கலாம் என்று நிச்சயிக்கும் பொருட்டு, அதற்குமுன் அவனோடு நெருங்கிப் பழகிய ஒவ்வொரு பெண்ணின் வடிவத்தையும் அவன் தனது மனத்தில் பாவித்துக்கொண்டு அதை அந்தக் கைதிப் பெண்ணினது வடிவத்தோடு ஒத்திட்டுப் பார்த்தான். இருந்தாலும், அவளது முகம் மாத்திரம் மூடப்பட்டு இருந்தமையால், அவன் எதையும் நிச்சயமாகக் கண்டுபிடிக்கக் கூடாமலிருந்தது. -