பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i58 பூர்ணசந்திரோதயம்-4 கொள்ளலாம். அதற்காக நாம் இருவரும் ஒன்று கூடுவதற்கு இடையூறாவது காலதாமசமாவது ஏற்படுவது என்றால் அது என் னால் கொஞ்சமும் பொறுக்கக் கூடாததாக இருக்கிறது” என்று மிகமிக வாத்சல்யத்தோடு இறைஞ்சிக் கூறினார்.

அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் சுவர்க்கலோகமே புன்முறுவல் செய்வதுபோலத் தனது இன்பங்களை எல்லாம் காட்டிப் புன்னகை செய்து கிள்ளைமொழிவது போல மழலை மொழியாகப் பேசத் தொடங்கி, “மகாராஜாவுடைய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கக் கேட்க, என்னுடைய உள்ளம் பூரித்துப் பொங்குகிறது; என்னைப் போன்ற பாக்கியசாலிகள் இந்த உலகத்தில் வேறே யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தையும் பெருமையையும் நான் அடையும் படி செய்கிறது. என்னுடைய வேண்டுகோள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், மகாராஜா அதற்கு இணங்குவீர்கள் என்று என் மனம் உறுதியாக நம்பினாலும், இப்போது நான் சொல்லப் போகும் விஷயத்துக்குத் தாங்கள் இசைவீர்களோ என்று என் மனம் சந்தேகம் கொள்ளுகிறது. ஆகையால், விஷயத்தை எப்படி வெளியிடுகிறது என்ற பயம் என் நாக்கைப் பின்னுக்கு இழுக்கிறது; ஆகையினாலேதான் நான் பேசமாட் டாமல் தவிக்கிறேன். துணிந்து சொல்ல மகாராஜா உத்தரவு கொடுத்தால், நான் உடனே என் மனசில் உள்ளதை வெளியிடு கிறேன்’ என்று தேன்போல மாதுரியமாக மொழிந்தாள்.

அவளது மோக வலையில் சிக்கி மதிமயங்கித் தமது சுய விவேகத்தை இழந்திருந்த இளவரசர், “நான் இவ்வளவு தூரம் உனக்கு உறுதி செய்து கொடுத்தும், இன்னமும் நீ ஏன் சந்தேகப்படவேண்டும்? நீ கேட்பது எதுவாக இருந்தாலும் சரி, அதை நான் நிறைவேற்றி வைப்பது நிச்சயம். நீ கொஞ்சமும் யோசிக்காமல் சங்கதியை வெளியிடலாம்’ என்று அழுத்தமாக வும் உறுதியாகவும் கூறினார். - -