பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 209 இறங்குகின்றன. அப்படியே நீ கீழே போய்க் கூக்குரலிட்டுத் திருடன் மேலே வந்திருப்பதாகச் சொன்னால் வேலைக்காரர்கள் விழித்துக்கொள்வார்கள்; நீ அவர்களை மேலே அனுப்பிவிட்டு எங்கேயாவது மறைந்துகொள். எழுந்து சீக்கிரமாகப் போ. இப்போது ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு கோடி பெறும். நீ போகத்தவறினால், உனக்குத்தான் பெருத்த பொல்லாங்கும் மானபங்கமும் நேரும்’ என்றார்.

கடைசியாக கட்டாரித்தேவன் பேசிவிட்டுப் போனதையும் ஷண்முகவடிவு ஒருவாறு கேட்டுக்கொண்டிருந்தாள். ஆகையால், கிழவர் அப்போது பேசியது கபடமாகப் பேசிய தல்லவென்று உணர்ந்து கொண்டவளாய் விரைவாக எழுந்தாள். தாம் கிழவரிடத்திலிருந்து தப்பித் திருடனிடம் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தால், அது சட்டியிலிருந்து தப்ப நினைத்து அடுப்புக்குள் விழுவது போல முடியும் என்று நினைத்தவளாய் அந்த மடமாது அவ்விடத்தை விட்டுக் கிழவர் காட்டிய அடையாளம்படி போய் அவ்விடத்தில் காணப்பட்ட ரோஜாப் பூவில் கையை வைத்தாள். அவ்விடத்தில் ஒரு கதவு திறந்து கொண்டது. ஜெமீந்தார் சொன்னபடி அதற்கப்பால் படிகள் இறங்கின. ஷண்முகவடிவு அப்பால் போய் கதவை இழுத்து மூடிக்கொண்டு படிகளில் இறங்கிப் போய்விட்டாள்.

அதன்பிறகு கால் நாழிகை நேரம் கழிந்தது. கட்டாரித்தேவன் ஜெமீந்தார் இருந்த இடத்திற்கு மறுபடி வந்து ஷண்முகவடிவு படுத்திருந்த இடத்தைப் பார்த்தான். அவள் காணப்படவில்லை. அவனது மனதில் ரெளத்திராகாரமான கோபம் பொங்கி எழுந்தது. அவனது கண்ணில் தீப்பொறி பறந்தன. மீசைகள் துடித்தன. அவன் ஜெமீந்தாரை நோக்கி, ‘ஐயா ஜெமீந்தாரே நீர் செய்த தந்திரம் எனக்குத் தெரிந்துபோய்விட்டது. இங்கே இருந்த பெண்ணை நீர் கூப்பிட்டு வேறே வழியாகக் கீழே அனுப்பி இருக்கிறீர் என்பது தெரிகிறது, அவள் வேலைக்காரர்களை எழுப்பப் போயிருக்கிறாள் போலிருக்கிறது. சரி, அவர்கள் வந்து