பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பூர்ணசந்திரோதயம்-4 துரத்திக் கொண்டு வந்தாலும் வரலாம் என்ற எண்ணமும், மேன்மாடத்தில் வந்த திருடனுக்குத் துணையாக வேறு பல திருடர்கள் வந்து வீதியில் ஒளிந்திருந்தாலும் இருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றின. ஆகையால், அந்தப் பேடன்னம் பின்னாலும் பக்கங்களிலும் மருண்டு மருண்டு திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஒட்டமும் நடையுமாகச் செல்லத் தொடங்கினாள்; அது அந்த நகரத்தின் வடக்கு ராஜவீதி யாதலால், அவள் கிழக்குத் திக்கை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

ஊர் முற்றிலும் ஒடுங்கி, ஒசையும் ஒடுங்கிப் போயிருந்தன. ஆனாலும் பக்கத்திலிருந்த சந்துகளில் நாய்கள் வெள்வெள் என்று பலமாகவும் பயங்கரமாகவும் குலைத்துக் கொண்டி ருந்தன. ஆதலால், அவளது மனதில் பெருந்திகில் குடிகொண்டு அவளது உடம்பைத் திடுக்கு திடுக்கென்று தூக்கிபோட்டது. உடம்பின் உரோமமெல்லாம் அடிக்கடி சிலிர்த்துச் சிலிர்த்துத் தணிந்து கொண்டிருந்தது. பயம் அவளைப் பின்னுக்கு இழுத்தது. ஆனாலும் மனோவேகம் அவளது உடம்பை முன்னுக்குத் தள்ளிக்கொண்டே இருந்தது. தனக்கு முற்றிலும் புதுமையான அந்த ஊரில் அப்போது தான் எங்கே போகிறது, அந்த இரவை எப்படிக் கழிக்கிறது என்ற நினைவையே கொள்ளாமல், கிழவருடைய மாளிகைக்கு வெகுதூரத்திற்கு அப்பால் தான் அதி சீக்கிரம் போய்விட வேண்டுமென்ற ஓர் எண்ணத்தையே கொண்டவளாய், அந்த மெல்லிய நங்கை சென்று கொண்டிருந்தாள். அந்த வீதியில் வெகு தூரத்திற்கு ஓரிடத்தில் லாந்தர்க்கம்பங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.ஆதலால், அவற்றிலிருந்த வெளிச்சம் அற்ப பிரகாசம் உடையனவாக இருந்தது. ஆகையாலும், அந்த விளக்குகள் எண்ணெய்க்குச் சேதமாக இருந்தனவேயன்றி, எவருக்கும் உதவியாக இருக்க வில்லை. ஆகாயத்தில் நிறைந்திருந்த கோடானு கோடி நட்சத்திரங்களின் ஒளியினால், இருளின் கடுமை குறைந்திருந்த