பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பூர்ணசந்திரோதயம் - 4. உடனே சாமளராவ் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு விளக்கைச்சுவரிலிருந்த ஆணியில் மாட்டிவிட்டு உள்ளேபோக அதன்பிறகு அரைக்கால் நாழிகை சாவகாசம் சென்றது. அம்மணிபாயி, “யார் அது என்னைக் கூப்பிடுகிறது?’ என்று மிருதுவாக கேட்டுக்கொண்டே கதவண்டை வந்து நின்றாள்.

அப்படி வந்த நின்றவளைக் கண்ட ஷண்முகவடிவு உடனே திடுக்கிட்டுப் பிரமித்து, ‘ஐயா இந்த அம்மாள் தான் என்னை கோலாப்பூரிலிருந்து அழைத்துவந்தது. நான் முதலில் இவர்கள் வீட்டிலேதான் வந்திறங்கினேன். சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமிட்ட வீட்டிலுள்ள சோமசுந்தரம் பிள்ளையிடம் என்னை அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்லி இந்த அம்மாள் என்னை வண்டியில் வைத்து அழைத்துக்கொண்டு வடக்கு ராஜ வீதியில் நான் காட்டிய மாளிகைக்குப் போய், அங்கேயிருந்த ஒரு கிழவரிடம் விட்டு அவர்தான் சோமசுந்தரம் பிள்ளையென்று சொன்னார்கள்’ என்று ஆவேசத்தோடு கூறினாள்.

இன்ஸ்பெக்டர் உடனே அம்மணியாயின் முகத்தை உற்று பார்த்தார். அம்மணிபாயி ஒன்றையும் அறியாமல் ஆச்சரிய மடைந்தவள் போலவும், தனது பொறுமையை இழக்காமல் நிதானமாகவும் பேசத் தொடங்கி, ‘இந்தப் பெண் யார்? இவளை நான் இதற்குமுன்பார்த்ததாகவே நினைப்பில்லையே! கோலாப்பூரிலிருந்து நானாவது இந்தப் பெண்ணை அழைத்து வருகிறதாவது ? வடக்கு ராஜவீதியிலுள்ள ஒருவருடைய மாளிகையில் கொண்டுபோய் விடுகிறதாவது? இந்தப் பெண் சொல்வது எதுவும் எனக்கு நன்றாக விளங்கவில்லையே. இந்தப் பெண் என்னை வேறே யாரென்றோ தவறாக நினைத்துக் கொண்டு பேசுகிறாள் போலிருக்கிறது” என்றாள்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டரும் ஷண்முகவடிவும் மித மிஞ்சிய வியப்பும் பிரமிப்பும் அடைந்தனர். ஷண்முகவடிவு