பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பூர்ணசந்திரோதயம்-4 மனப் பூர்வமான சந்தோஷத்தோடு நடந்துகொள்ளுகிறேன். என்று உண்மைபோலவும் உருக்கமாகவும் அவனது மனது இரங்கும் விதமாகவும் கூறினாள்.

அவள் அவ்வளவு சுலபத்தில் தனது விருப்பத்திற்கு இணங்கி வருவாள் என்று கட்டாரித்தேவன் எதிர்பார்க்கவே இல்லை. அவள் நிரம் பவும் பதிவிரதைத்தனம் பாராட்டித் தன்னை இழிவாகத் துஷிப்பாளென்றும், தான் அவளிடம் பலாத் காரமாக நடந்துகொள்ள வேண்டியிருக்குமென்றும் அவன் எதிர்பார்த்தான். ஆதலால், அவள் அவ்வளவு சுலபத்தில் மாறுபட்டுப் போனது அவனுக்கு முற்றிலும் வியப்பாகவும், நம்பக்கூடாததாகவும் இருந்தது. அவள் ஒருவேளை ஏதாகிலும் தந்திரம் செய்து தன்னை ஏமாற்றி விடலாமென்று நினைத்து அவ்வாறு கபடமாகப் பேசுகிறாளோ என்ற யோசனையும் அவனது மனதில் தோன்றியது.

அவள் தன்னிடத்திலிருந்து எப்படியும் தப் பிப்போக முடியாது ஆகையால் அவள் கபடமாகப் பேசினாலும், உண்மையைப் பேசினாலும் அதைப் பற்றித் தான் சிறிதும் கவலைப் படாமல் மறுநாள் வரையில் அவளுடைய விருப்பத்தின்படி பொறுத்திருப்பதே உசிதமானதாகத் தோன்றியது. அதுவுமன்றி, அவள் அளவற்ற மிருதுத் தன்மையும், அபாரமான மேம்பாடும், பெருந்தன்மையும், விலை மதிப் பற்ற உயர்வும், இன்ப நிறைவுமாய் அற்புத தேஜசோடு தெய்வீகத்தன்மை வாய்ந்து தோன்றினாள். ஆகையால், அவளது மனம் வருந்தும் படி அவளைக் கசக்கி மோருவதற்கும் அவனது மனம் கூசிப் பின்வாங்கியது. ஆகையால், அவன் அவளது இச்சைப்படி நடந்து கொள்ளத் தீர்மானித்துக் கொண்டவனாய், நிரம் பவும் அன்போடும் மரியாதையோடும் பேசத் தொடங்கி, ‘பெண்ணே நீ நல்ல யூகமும் விஷய ஞானமும் உடையவளாயிருப்பதைக் காண எனக்கு நிரம்பவும் சந்தோஷம் உண்டாகிறது. நான் சொன்ன