பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 83 உம்மிடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசி உம்முடைய விருப்பத்தை அறிய வேண்டும் என்று வந்தேன். நான் கேட்பதற்கு நீர் சரியான உத்தரம் சொல்லுவீர் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் உம்மை இந்த ராஜாங்கத்தார் என்னகருத்தோடு இவ்விடத்தில் சிறைப்படுத்தினார்கள் என்பது உமக்குத் தெரிந்த விஷயம். நீர் உம்முடைய உண்மைப் பெயரை மாற்றிக்கொண்டு வெளிப்படையான யாதொரு முகாந்திரமும் இன்றி, இந்தத் தேசத்தில் பிரயாணம் செய்ததைக் கண்டு ரகசியப் போலீசார்கள் சந்தேகம் கொண்டு, உம்முடைய வரலாறுகளை எல்லாம் நன்றாக விசாரித்தறிந்து கொள்ளும் வரையில் உம்மை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தார்கள். ஆகையால், அதன்மேல், நீர்சிறைப்படுத்தப்பட்டீர். அதன்பிறகு இப்போது சுமார் ஒன்றரை மாச காலம் ஆகிறது. ரகசியப் போலீசார்தஞ்சாவூருக்குப் போயிருக்கிறார்கள். அவர்களுடைய விசாரணை இன்னம் முடிவடையவில்லை. அவர்கள் இதுவரையில் எங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கைகளைப் பார்த்தவரையில், உமக்கு அனுகூலம் ஏற்படும் என்றாவது, நீர் சீக்கிரம் இந்தச்சிறையிலிருந்து விடுபடுவீர் என்றாவது எண்ண இடமில்லாது இருக்கிறது. ஆகையால், நியாயமாகப் பார்க்குமிடத்தில் நீர் இன்னம் வெகுகாலம் வரையில் இவ்விடத்திலேயே இருக்க வேண்டியவராக இருக்கிறீர். ஆனால், சில தினங்களுக்கு முன் நீர் இவ்விடத்தில் சில துன்மார்க்கமானகாரியங்களை நடத்தி, அதன் பலனாக பலமான நோயில் விழுந்து விட்டீர். நாம் உடனே ஒரு வைத்தியரை அமர்த்த அவர் இரவு பகல் உமது பக்கத்திலேயே இருந்து சிகிச்சை செய்து உம்மைக் காப்பாற்றி விட்டார். ஆனாலும், அவர் அதன்பிறகு உமக்கு எவ்வளவோ அருமையான மருந்துகளை எல்லாம் கொடுத்து வருகிறாராம். உம்முடைய உடம்பு இளைத்துக் கொண்டே வருகிறதாகத் தெரிகிறது. அன்றையதினம் நீர் உம்முடைய அறையின் சுவரைக் குடைந்து கொண்டு பக்கத்து அறைக்குப் போய் அங்கே இருந்த அபிராமி