பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so பூர்ணசந்திரோதயம்-4 அப்படி இல்லை போலிருக்கிறது. வேண்டியவர்கள் வேண்டாத வர்கள் என்பதையும் சிபார்சையும் வேறு பலவிதமான காரணங்களையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஒரு தலைச் சார்பாக இருந்துஜனங்களைவதைக்கத் தொடங்கினால், மனிதர் இப்படிப்பட்ட தேசத்தில் இருப்பதை விட கொடுமையான பாம்புகளும், கரடிகளும், புலிகளும் வசிக்கும் காடுகளில் போய் வாழ்வது கூட உசிதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அபிராமி என்ற அந்தத் தாதிப்பெண் அன்றைய தினம் இரவில் சுவரைக் குடைந்துகொண்டு நான் இருந்த அறைக்குள் வந்து என்னைத் துன்மார்க்கமான நடத்தையில் செலுத்த முயன்றாள். நான் அதை மறுத்துக் கடைசிவரையில் அவளது விருப்பத்துக்கு இனங்காமலேயே இருந்து வந்தேன். அவள் நடித்த நாடகமும், அடித்த ஆட்டமும், செய்த தந்திரங்களும் பயன்படாமல் போகவே, அவள் என்னிடம் பலாத்காரத்தை உபயோகித்து பல தடவைகளில் என்னைக் கட்டிப் பிடிக்க முயன்றாள். நான் முதலில் நயமாகவும் பயமாகவும் சொல்லிப் பார்த்தது எல்லாம் பயன்படாமல் போகவே, நான் அவளைத் தூரத்தில் தள்ளிவிட நேர்ந்தது. அவள் வேண்டுமென்றே கீழே விழுந்து தனது மண்டையை உடைத்துக் கொண்டாள். அந்தச்சமயத்தில் நீங்கள் வந்தீர்கள். பாராக்காரன் குற்றத்தையெல்லாம் என்மேல் சுமத்தினான். அவளும் அவனுக்கு அனுசரணையாகவே பேசினாள். அதைக் கேட்டுக் கொண்டு நீங்களும் போய் விட்டீர்கள். உண்மையில் இங்கே என்ன நடந்ததென்று என்னிடத்தில் கேட்க வேண்டுமென்ற நியாயம் உங்களுடைய மனசில் படவில்லை. இப்போது நீங்கள் நியாயாதிபதி யினிடத்தில் நடந்த விசாரணையில் சாட்சி சொன்னதாகச் சொல்லுகிறீர்கள். அந்தப் பெண் சொன்னதே வேதவாக்கியம் என்று நீங்கள் எண்ணி அப்படியே சாட்சியம் சொன்னிர்கள் போலிருக்கிறது. இவைகளையெல்லாம் யோசிக்கையில், இந்தத் தாதிப் பெண் என் அறைக்கு வந்தது முதலிய காரியங்களெல்லாம் உங்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கின்றன